அண்மைய செய்திகள்

recent
-

கவிஞர் உள்ளுர் அறிவிப்பாளர் குறும்பட நடிகர் பி.பெனில்டஸ் தற்குருஸ் அவர்களின் அகத்திலிருந்து.

''கலைஞனின் அகம் கணனியில் முகம்''


ஊனமுற்றவர்கள் அங்கவீனர்கள் மாற்றுத்திறனாளிகள் விசேட தேவையுள்ளவர்கள் என காலத்திற்கு காலமாய் புதிது புதிதாய் பெயர்களை சூட்டி அறிக்கைகளை வெளியிடுவதும் ஊடகங்களில் ஒலி ஒளிப்படங்களை வெளியிடுவதோடு நின்று விடுகின்றது. இவர்களின் சேவை மனப்பாங்கு மனிதனின் அடிப்படை தேவையான உணவுஇஉடைஇ உறையுள்இ என்னும் மூன்றினையும் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் படும்இதுன்பஇ துயரங்களைஇ மன வேதனைகளைஇ கண்டு ஆறுதல் சொல்வார் யாருமில்லை... .எங்கள் வாழ்விலும் ஒளியேற்ற முன்வாருங்கள் என்கிறார்..


மாற்றுத்திறனாளியான கவிஞர் உள்ளுர் அறிவிப்பாளர் குறும்பட நடிகர் என நம்பிக்கை நாயகனாக திகழும் பி.பெனில்டஸ் தற்குருஸ் அவர்களின் அகத்திலிருந்து.



தங்களைப் பற்றி?

பொன் விளையும் பூமியாம் மனம் விரும்பும் மாதோட்டத்திலே காத்தான்குளம் வட்டக்கண்டல் தான் எனது சொந்த இடம் ஆரம்பக்கல்வியை 
மன்/கருங்கண்டல் றோ.த.க.பாடசாலையிலும் சாதாரண தரம் வரை மன்/பத்திமா மத்தியமகாவித்தியாலத்திலும் கற்றேன். தற்போது தோட்டவெளி மன்னாரில் வசித்து வருகின்றேன் .எனது தாயும் மனைவியோடும்.




தங்களின் இந்நிலைக்கான (ஊனமுற்றவராக) காரணம் ?

வீட்டுச்சூழல் பொருளாதாரம்இஅதுவும் என்னுடைய தேவையை நானே நிறைவேற்ற வேண்டும். என்று கருதி வயரிங்வேலைக்கு சென்றேன். அன்று தான் 2002ம்ஆண்டு கார்த்திகை மாதம்12ம் திகதி என்வாழ்வையே சூனியமாக்கிய இந்த விபத்து நடந்தது. மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்தேன.; என்னுடைய முள்ளந்தண்டு இடத்தில் (வு-11-நுடநஎn) என்னும் முள்ளந்தண்டில் வு-11வது எலும்பு உடைந்து போனது. அதன் காரணமாக நெஞ்சுக்கு கீழ் எந்தவித உணர்வும் அற்றவனாய் ஊனமுற்றவனாய் வாழ்ந்து வருகின்றேன்.




தங்களின் நிலைகண்டு யாரும் உதவி செய்ய முன்வரவில்லையா? 

யாருமே முன்வரவில்லை எனது மூத்தசகோதரி தான் எல்லாவிதமான உதவியையும் செய்தார். உற்றதுணையாக இருந்தார். அப்போது எங்கள் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடிய காலப்பகுதி மிகவும் துன்பமான சூழல் அச்சூழலிலும் என் தம்பி எழுந்து நடக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவளாய் தன்னிடம் இருந்த தாலிக்கொடியையும்இ நகைகளையும் விற்று வந்தப்பணத்தில் என்னை மன்னார் வைத்தியசாலைஇ அநுராதபுர வைத்தியசாலைஇ பின்பு கொழும்பு வைத்தியசாலையில்இ இலங்கையிலே எலும்பு முறிவு சிறந்த நிபுணர் என்று சொல்லக்கூடிய வசந்த பெரோ எனும் மருத்துவர் தான் என்னைப் பார்த்ததும் நான் ஒரு இயக்கப்போராளி என எண்ணம் கொண்டார். நான் எனது பாடசாலை அடையாள அட்டை பல ஆதாரங்களைக் காட்டியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் தமிழன் என்ற காரணத்தினால் புறக்கணிக்கப்பட்டேன். .தான் செய்யாவிட்டாலும் மற்ற எவரும் சிகிச்சை செய்து விடக்கூடாது. என்கிற எண்ணத்தின் விளைவாக ஒருமாதமஇ; இரண்டுஇமூன்று மாதங்களை கடத்திய பின் நான் உமக்கு சிகிச்சையளிக்க மாட்டேன். என்பதை தெளிவுபடுத்தினாh.; அதன் பின்பு தான் இந்திய மருத்துவமனையில் அப்பல்லோவில் இந்திய மருத்துவரான குமாரவேல் நிபுணர் பரிசோதித்துவிட்டு எலும்புகள்இ எல்லாம் முற்றி நன்றாக வளர்ந்து விட்டது. காலதாமாகிவிட்டது இனிச்சிகிச்சை செய்தால் இரண்டு கைகளும் செயல் இழக்க நேரிடும் என்றார். பின்பு நவலோக்க சிகிச்சைகள் போன்ற மூலமும் மாறி மாறி செய்ததில் பத்து இலட்சம்இ பணம் தான் வீணாதே தவிர எனக்கு விமோனசம் கிடைக்க வில்லை.




மேலதிக முயற்சிகள் ஏதும் செய்யவில்லையா?

ஏன் இல்லை எனக்கு எழுந்து நடப்பேன் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. எனது வாழ்க்கை படுத்தபடுக்கையில் தான் என்று முடிவிற்கு வந்தேன். மலம்இசலம் எல்லாம் படுத்தபடுக்கையில் தான் இவ்வாறான துன்பத்தை எனது குடும்பத்திற்கு கொடுப்பதா என்று பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். தடுத்துவிட்டாள் எனது சகோதரியும் சகோதரர்களும.; எனது மூத்தசகோதரி மட்டும் மீண்டும் தன்னமிக்கையோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யூதாசகி ஆலயத்திற்கு படுத்தபடுக்கையாகவே என்னை குருவானவர் போல் றொபின்சன் அவர்களிடம் அழைத்து சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கி செப தப முயற்சிகளில் ஈடுபட்டதின் பலனாக படுத்தபடுக்கையாக இருந்த நான் எழுந்திருக்கும் அளவிற்கு வல்லமை பெற்றேன். இறைவல்லமையினால் என்னாலும் பல வேலைகளை செய்ய முடிந்தது. எல்லாம் எனது சகோதரியின் நம்பிக்கை என்னை நலமடைச் செய்தது.




கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் பற்றி?

பதினொட்டு வயதிலேயே விபத்துக்காரணமாக படுத்தபடுக்கையாகி விட்டேன். எனது தனிமை துன்பச்சூழல் வாழ்க்கையில் வெறுப்பு மன கொதிப்பு அத்தனை வலிகளையும் போக்கவே நான் எழுதினேன். அதுவும் நான் முதல் எழுதியது எனக்கான மரண அறிவித்தல் தான் பின்பு இரண்டாவதாக எனக்கான கண்ணீ அஞ்சலி தான் இயலாமையும் இதயவலிகளும் கவிதைகளாக ஊற்றெடுக்க ஆரம்பித்தது.




உங்கள் வலியின் ஊற்றான கவிதைக்கு களம் அமைத்து தந்த ஊடாகம் பற்றி?

நல்லதொரு கேள்வி நிச்சயமாக அவ்வாறு வலியோடு பிரசவித்த கவிக்குழந்தைகளை சுமந்தவர்கள் மித்திரன் இவீரகேசரி இதினமுரசு போன்ற பத்திரிக்கைகளில் பெனில் என்ற பெயரிலும் மன்னா கத்தோலிக்க பத்திரிகையிலும்இ ஆக்கங்களை எமுதினேன் சிறகுடைந்த இளம் சிட்டு எனும் பெயிரில் ஏன் என்றால் சிட்டுக்குருவிக்கு சிறகுகள் உடைந்து விட்டால் அதன் வாழ்க்கை எப்படி இருக்குமோ அதே போல் தான் என் நிலையும் பதினெட்டு வயது இளம் வாலிபான எனது வாழ்வும் அது தானே. அதுபோல சூரியன் பண்பலையில் அதிகாலை 3-5 மணிவரை ஒலிபரப்பாகும் ரிங்காரம் நிகழ்ச்சி கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. காரணம் எனக்கு தூக்கம் என்பதே இல்லை. இருண்ட வாழ்வில் பகல் ஏது. ரிங்காரம் நிகழ்ச்சியில் எனது கவிதைகளை சொன்N;னன் மரணம் இதற்கொலைஇ சாவு முடியாமைஇ இயலாமை போன்ற தலைப்புக்களில் கவிதை செல்லி வந்த பொழுது சூரியன் வானொலி அறிவிப்பாளர் தான் சொல்லுகின்ற தலைப்பிற்கே கவிதை சொல்ல வேண்டும். .அதுவும் பிறரின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமே தவிர அவர்களின் வாழ்வை மீண்டும் தாழ்வு நிலைக்கு கொண்டு சொல்ல கூடாது. அந்தச் செல்லின் வினைவாகவே என்னிடம் இருந்து காத்திரமான படைப்பாக எனது கவிதை எழுதவும் அத்தருணத்திலே என்னை மாற்றிக் கொண்டேன்.

அப்போது......


முறிந்தது.....
முள்ளத்தண்டு மட்டும் தானே என்
உள்ளம் இல்லையே
உடல் தானே உணர்வற்று கிடக்கிறது
உணர்வுகள் இல்லயே
குருதி என்னுள் உறையும் போதும்
உறுதி என்னுள் நிலைத்திருக்கும்
நான் ஊனமில்லை என்று உரைக்க...............



துன்ப வாழ்வில் இருந்து மீட்கப்பட்டபோது எழுதிய முதல் கவிதை இது எனது வலியை விட்டு நான் வாழும் சமூதாயத்தை நோக்கினேன். காதல்இ சமூதாயம்இ அறிவியல்இ ஆன்மீகம்இ போன்ற தலைப்புக்களில் எழுதத் தொடங்கினேன் .தொடர்ச்சியாக சூரியன் வனொலியில் 8 வருடங்காளாக ரிங்காரம் நிகழ்ச்சியில் கவிதை சொல்லி வருகிறேன். அதன் தொடர்ச்சியாகவே எனது கவிதையாற்றல் வளர்ச்சி கண்டது. என் சிந்தனையில் ஏன் நான் வனொலியில் செல்லிய கவிதைகளையும் பத்திரிக்கையில் வந்த கவிதைகளையும் என்னிடம் கைவசம் இருந்த கவிதைகளையும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனாலும் எனது நிலையும் பொருளாதார சூழல் இரண்டையும் நினைத்து கலங்கினேன். தினம் தினம் எனது ஆசையினை மன்னா பத்திரிக்கை ஆசியியரும்இ மன்னார் தமிழ்ச்சங்க தலைவருமான அருட்பணி தமிழ் நேசன் அடிகளாரிடம் சொன்னேன். நான் உங்கள் வெளியீட்டிற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன். ஆனால் ஏற்படுகின்ற பணச் செலவினை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார் .என் ஆசை நிறைவேறாத என்ற ஏக்கமே மிஞ்சியது.




உங்கள் கவிதை தொகுதி வெளிட வேண்டும் என்ற ஆசை எவ்வாறு நிறைவேறியது?

நெடுந்தீவு முகிலனின் ''கடவுளின் சலனத்தை கலைக்கும் மணியோசை'' என்ற நூல் வெளியிடு விழாவிற்கு என்னையும் அழைத்து இருந்தார்கள.; அவ்விழா தான் என்னை பிறருக்கு அடையாளம் காட்டியது. வானொலியில் கவிதை சொல்லியபோது எனது குரல் மட்டும் தானே முகம் தெரியாது மன்னார் பெனில் என்று பத்திரிக்கையில் எழுதியதால். தெரியும் என்னை யார் என்று இவர்தான் மன்னார் பெனில் என்று அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல் பொன்னாடை போர்த்தி கொளரவித்து என்னையும் சிற்றுரை ஆற்றுமாறு பணித்தார்கள். நான் எனது சிற்றுரையில் நானும் ஒரு கவிதை நூலை வெளியிட விரும்புகிறேன். என்ற எண்ணத்தையும் எனது நிலைமையினையும் வெளிப்படுத்தினேன்.




உங்கள் முதலாவது நூல் வெளியீடு பற்றி ?

தாயானவள் கருவை பத்துமாதம் சுமந்து அதற்கு மேலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் அவள் படுகின்ற வேதனை எப்படி இருக்கும். அது போல் தான் நான் இருக்கிறேன் என்ற எனது சிற்றுரையின் பிரதிபலிப்பாக புத்தக வெளியிட்டிற்கான நிதியுதவியினை மன்னார் வத்தகரான அல்போன்ஸ் சம்மாட்டியர் அவர்களும் சில அமைப்புகளும் அருட்திரு தமிழ் நேசன் அடியளாரின் துணையோடும் எனது முயற்சியாலும் எனது முதலாவது கன்னிப் படைப்பான ''வலியின் விம்பங்கள்'' கவிதைத்தொகுதி 7.10.2012 புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் மன்னார் மாவட்ட ஆயர் தலமையில் பெரியோர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக வெளியீடுகண்டது.




உங்கள் இரண்டாவது படைப்பு பற்றி ?

எனது இரண்டாவது படைப்பாக வெளிவர இருப்பது ''வார்ப்புக்கள்'' எனும் தலைப்பில் என் சார்ந்த கவிதைகளை எழுதாமல் பிறரின் வலிகளை துன்பங்களை என்னுடைய சிந்தனையில் உள்வாங்கி ஆழ்ந்து சிந்தித்து இரைமீட்டி இதுவரை எழுதாத வகையில் குறியீட்டு கவிதைகளாக எழுதி வருகின்றேன். மிகவிரைவில் அது நூலக உருப்பெறும் என்ற நம்பிக்கையோடு பொருளாதார நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.




உங்கள் வாழ்வின் வாழ்க்கை துணை  பற்றி ?

எனக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாகத்தான் இருந்தது எனது வாழ்வு'' வட்டம் இவ்வளவு தான் என்று வாழ்ந்து வந்தேன். எவ்விதமான பிடிமானமும் இல்லை லைப்பே இல்லை என்று இருந்த எனக்கு நல்லதொரு ''வைப்'' கிடைத்தது''. என்வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது காரணம் செடியொன்று வளர வேண்டுமென்றால் அதற்கு உறுதுணையாக மரமோஇதடியோ தேவை அம்மா எனது அக்காவிற்கு பிறகு எல்லாமாக இருப்பவள் கடவுள் தந்த அருள் கொடை. என் மனைவி என்றே சொல்வேன் உன்னதமான உறவு என் வாழ்வின் எதிரொலி எதிர்காலமே என் மனைவி ''லீனா'' தான்.




உங்கள் இருவருக்குமான முதல் சந்திப்பு எவ்வாறான சூழ்நிலையில் அமைந்தது?

எனது மனையின் நண்பி சுபா என்பவர் எனக்கும் நண்பியாக இருந்தார். என் நிலை பற்றியும் என்னுடைய நிலை பற்றியும் என்னுடைய தொலைபேசி இலக்கத்தைப் பெற்று சுமார் ஒன்றாரை வருடங்களாக தொலைபேசியிலே எமது அன்பு பரிமாற்றமும்; ஆறுதல் வார்த்தைகளும் என்னை வளப்படுத்தியது. அத்தருணத்தில் நான் மன்னார் வைத்தியசாலையில் மீண்டும் சிகிச்சை பெற்று வந்தேன். அன்று என்னை நேரில் பார்க்க வருவதாகவும் சொன்னார் நானும் அன்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். நான் இவரின் குரலுக்கு உருவம் கொடுத்து மிகவும் திறமையான பெண்ணக இருப்பார் என்றிருந்தேன.; இருவரும் வந்தார்கள் என் எண்ணத்தில் நின்றவளே எதிரில் வந்து நின்றாள். கண்டவுடன் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி எனக்கு வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு நாம் இருவரும் வாழலாம் இவர் என்னை கடைசி வரை வைத்து காப்பாற்றுவார். என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. கதைத்தோம்இ பேசினோம் இருமனமும் இணைந்து கொள்ள திருமணமும் நடந்தது.




மற்றவர்களைப் போல் உங்கள் திருமணமும் நடந்ததா?

ஆம் நிச்சயமாக நான் ஒரு போதும் என்னை ஊனமுற்றவன் என்று நினைத்ததில்லை. இது எனக்கான எண்ணம் ஆனால் திருமணம் எனும் போது பல விடையங்களை பார்க்கவேண்டும் பல சமய சம்பிரதாய முறைகளை கடைபிடிக்க வேண்டும். .முதல் கட்டமாக என்னுடைய மனைவியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை காரணம் யார்தான் நெஞ்சுக்கு கீழ் உணர்வற்ற ஒருவனை ஊனமுற்றவனை திருமணம் செய்து வைப்பார்களா? என் மனைவி என்னை பற்றி தெளிவாக புரிந்து கொண்டவள் இஅறிந்து கொண்டவள் ஆதாலால் சகலவிதமான சமூதாயம் சூழல் பிரச்சனைகளை முறையான வழியில் நேர்த்தியான யோசனையில் தீர்த்து மன்னார் மாவட்ட அதி வந்தனைக்குரிய ஆயர் முன்னிலையில் திருமணம் நிறைவேறியது.




இவரை முதல் முதலில் பார்க்கும் போது அனுதாபமா அன்பின் பிரதிபலிப்பா தோன்றியது மனதில்?

என்னுடைய பெயர் ''லீனா'' ஒட்டிசுட்டான் எனது சொந்த இடம் எனது நண்பியின் மூலம் இவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். .எனக்கு இரக்க உணர்வு மேலிட்டது நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் அந்த வலியும் வேதனையும் எனக்கு தெரியும். இறுதி யுத்தத்தின் கொடூர வடுக்கள் என் நெஞ்சில் இன்னும் இருக்கின்றது. இவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. இவரைப்பார்ப்பதற்காக மன்னார் வைத்தியசாலைக்கு வந்தேன.; இவரைப்பார்த்த போது இன்னும் என்மனம் இரங்கியது இவர் என்னோடு பேசினார் நானும் அம்மாவும் தனியாகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு உதவியாக யாருமில்லை என்றார். நான் இவரை காலம் முழுக்க வைத்து பார்க்கவேண்டும் என்று உறுதி கொண்டேன் சும்மா இவரை கவனிக்க முடியாது சமூதாயம் வேறமாதிரி கதைக்கும் எனவே இவரை முறைப்படி பதிவுத்திருமணம் செய்து என் கணவரை பாதுகாத்து வருகின்றேன்.




உங்கள் வீட்டில் இத்திருமணத்தை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எவ்வாறு திருமணத்திற்கு சம்மதம் பெற்றீர்கள்?

எங்கள் வீட்டில் எனக்கு 05 சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள்.ஒருவருக்கும் பெரிதாக விருப்பமில்லை கல்யாண நாள்வரை கூட யாவருக்கும் விருப்பமில்லை நான் தான் சொன்னேன் நீங்கள் எனக்கு கல்யாணம் செய்து வைக்கும் மாப்பிள்ளை எனக்கு ஒரு பிள்ளையோடு விட்டு விட்டுப் போனாலோ அல்லது எனக்கு பிறந்த பிள்ளை இப்படியான ஊனமுள்ள நிலையில் இருந்தாலோ நான்தானே வளர்க்கவேண்டும். தாங்க வேண்டும் அதேபோல் தான் இவரை என்னுடைய குழந்தையாகவே நான் பார்க்கிறேன். என்று பல முறை செல்லியே திருமணத்திற்கு சம்மதம் வாங்கினேன் இப்பவும் அம்மா அழுவதுண்டு என்னை நினைத்து பெற்றமனம் தானே.



ஆணும் சரி பெண்ணும் சரி தற்கால சூழ்நிலையில் ஆடம்பர சொகுசு வாழ்க்கையினையே விரும்புகிறார்கள் ஆனால் நீங்கள் வாழ்வின் நிஐமாக முன்மாதியான பெண்மணியாக திகழ்கிறீர்கள் இவரைப்பிற்றிய எதிர்காலக்கனவு ?

இவர் படிப்படியாக சுகமாகி வரவேண்டும் எழுந்து நடக்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் கிடையாது. இருந்து வண்ணமே எல்லா வேலையும் செய்வார் பெரிய புண்ணும் தற்போது மாறிக் கொண்டு வருகிறது. இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும.; எல்லாவற்றுக்கும் மேல இறைவன் உள்ளான.; அவன் பார்த்துக்கொள்வான். நான் எனது குழந்தையும் கணவருமான என்னவரை கடைசிவரை பாதுகாப்பேன்.




உங்கள் வாழ்வுக்கு கை தந்தவர்கள் பற்றி?

யாரும் இதுவரை கை தரவில்லை கையேந்தவும் விருப்பமில்லை. எங்களைப் போன்ற அங்கவீனர்களுக்கு பல விசேடத் தேவைகள் உள்ளன.காற்றுஇ மெத்தைஇ தண்ணீர்இ மெத்தைஇ மிகவும் முக்கியமாக கொமட்பாத்ரூம் அவசியத்தேவையாகவுள்ளுது. யார் கட்டித்தருவார்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடனே பலருடன் பல அமைப்புகளிடம் கேட்டுக் பலனில்லை நம்பிக்கை மட்டும் குறையவில்லை நூல்வெளியிட்டின் மூலம் கிடைத்த சிறு தொகையில் 10 கோழிகளை வளர்த்து வருகிறேன்.




இரண்டு கால்களும் செயலற்று இருக்கும் வேளையில் இரண்டு கரங்களோடு ''மூன்றாவது கையாக'' படுக்கையின் மேல் தொங்கும் கயிறை குறிப்பிடுகிறார்'



'

தங்கள் மனைவி பற்றி ?

என்வாழ்வின் வழி விழி மொழி எல்லாமே என் மனைவிதான் என்னை விட பலமடங்கு திறமையுள்ளவள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவள் நான் பலரிடம் உதவி கேட்டபோது என்னை ஒரு பிச்சைக்காரன் போல் எண்ணீனார்கள். ''இயேசுநாதர் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்''; என்றார் தட்டினோம் கேட்டோம் அவர்கள் பிச்சைக்காரனாய் பார்க்கிறார்கள். அதனால் தட்டுவதும் இல்லை கேட்பதும் இல்லை என்மனைவி ஆடைத் தொழிற்சாலையிலும் ஆட்டோ ஓட்டியும் என்னையும் என் மருத்துவச் செலவையும் கவணிக்கிறார். எங்களை கண்டு கொள்வார்யாருமில்லை சொந்தமாய் தொழில் செய்ய முதலீடு தேவைகடனடிப்படையில் கூட தருவார்யாருமில்லை.





துன்பத்தின் தொடர்கதையான நீங்கள் அதில் இருந்து பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை பற்றி ?

பதின்மூன்று வருடங்களாகிறது படுத்தபடுக்கையாக பட்டதுன்பங்கள் எனக்கு பெரும் முதிர்ச்சியை தந்திருக்கின்றது. எதையும் தாங்கும் இதயமாக உள்ளது. நல்லதொரு அனுபவசாலியாக மாறியிருக்கிறேன். இப்போது வலிகள் எனக்கு வலிகளாகவே தெரிவதில்லை. எனக்கு கற்பனையோஇவர்ணனையோ எழுதவராது ஏன் என்றால் ''வலிகள் தான் வாழ்க்கை உணர்வுதான் கவிதை'' என்பதே எனது வேத வாக்கு............


வலிகளே
வலியைத்தேடி
வலிகளோடும் வாழும்
வாலிபன் - நான்
வலிகளோடு வாழ்ந்தாலும்
வருந்தாமல் வாழ்கிறேன்
வலியே என் வாழ்வானதால்
நிஐமானதை எழுதும் போது உயிரோட்டம் இருக்கும் கற்பனையில்லாமல் வெளிப்பூச்சு இல்லாமல் எழுத வேண்டும் என்பது எனது ஆசையும் ஆவலும்.





 கவிதையும் கவிஞர்களையும் பற்றி?

கவிஞர்கள் என்பவர்கள் ஒரு தலைப்பை கொடுத்தவுடன் கவிதை எழுதுவர்கள். ஆனால் என்னால் அது முடியாது காரணம் நான் அத்தலைப்பிற்குள் ஆழமாக போகவேண்டும். அதை நான் கவிதையாக தெரிவு செய்ய வேண்டும். அதை இரை மீட்டி ஒன்றல்லஇ இரண்டல்ல பலதடவை சரி பார்த்த பின்புதான் ஏற்றுக்கொள்வேன். சிந்தனையிலே கவிதையாக ஏற்றுக்கொள்வதால் உடனடியாக கவிதை எழுதும் ஆற்றல் என கில்லைஇ திறமை பெற்றவனும் இல்லைஇ எப்போது என்னுடைய உள்ளத்தில் நெருடல்கள்இ வலி இதாக்கம்இ ஏற்படுகின்றதே அந்த நேரத்தில் தான் கவிதை எழுதுகிறேன். மற்றும் கவிதை வலியும் வேதனையும் தான் கவிதை எழுதுவன் எல்லாம் கவிஞன் இல்ல கவிதை அவன் வாழ்வாக வேண்டும். கலைஞர்களுக்குள் ஒற்றுமைஇ அன்புஇ பிரமாணிக்கம் இருக்க வேண்டும




கவிதைத்துறையன்றி வேறு துறைகள் ஏதும்?

மாணவபருவத்திலிருந்து படிப்பில்இ நடிப்பில் பெரிதாக நாட்டமில்லை ஆனால் நாடகத் கதைகள் பல எழுதியுள்ளேன். பீடபணியாளருக்கு நாடகம் பழக்கி மேடையேற்றியுள்ளேன். பல அமைப்புகளுக்கு விழிப்பணர்வு நாடகங்கள் எழுதிக்கொடுத்துள்ளேன். ''சிந்து தேசத்தின் சிற்பி'' எனும் வாசாப்பு நாடகத்தில் சங்கிலி மன்னனின் மந்திரியாக நடித்துள்ளேன்.பல நாடகங்களிலும் நடித்துள்ளேன். அத்தோடு சிறிய கற்பனைஇ கலந்து ''அன்னை இல்லம்இ'' ''திசை மாறிய பறவைகள்இ'' சமூதாய சிந்தனை கதைகள்இ மன்னா பத்திரிக்கைக்கு அனுப்பினேன். ''நேசக்கரம'; என்னும் தலைப்பில் எனக்கு வாழ்வு தந்த எனது மனைவியை பற்றிய கதையை எழுத வேண்டும். என்ற எண்ணம் உள்ளது. அது இன்னும் எழுத்துரு பெறவில்லை. எழுதமால் இருப்பதற்கு காரணம் சிந்தனைத்திறன் வேண்டும். கற்பனைத்திறன் வேண்டும் என்னிடம்; கற்பனைத்திறன் குறைவு என்னுள் வளரவேண்டும் வளர்க்கிறேன்


குறும்படத்தில் ஆற்றல் நடித்தமை பற்றி? 

மன்னார் மண்ணின் பல்துறை வித்தகன் . அ.நிசாந்தன் அவர்கள்pன் இயக்கத்தில் முதல் முறையாக ''வேகம்'' படத்திலும் தற்போது பெயரிடப்படாத தற்கொலை சமூதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக நடித்து கொடுத்துள்ளேன். எனது உண்மை நிலைவரத்தை அப்படியே செய்தேன் அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவரும்.




உங்களின் நிறைவேறாத கனவு ?

ஆம் நிச்சயமாக உள்ளது ஒரு அறிவிப்பாளனாக வேண்டும். என்ற எண்ணம் நெடுநாளாய் இருந்து கொண்டே இருக்கின்றது. மாணவப்பருவத்திலும் சரி இப்போதும் சரி எங்கள் ஊரில் கலைவிழாஇ ஒளிவிழா மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் எனது நிகழ்ச்சி தொகுப்பே முதன்மையாக இருக்கும.; தற்போதைய சூழலில் திறமைக்கு முதலிடம் கொடுப்பதில்லை பணம் அழகான தோற்றம் சிபாரிசு என்று பல அம்சங்கள் இருக்கவேண்டும் இவ்வாறு திறமையை மட்டும் வைத்துக்கொண்டு அதுவும் என்னைப் போன்றவர்கள் சொல்லவே தேவையில்லை. திறமைக்கு முதலிடம் கொடுத்து எம்மைப் போன்றவர்களை உற்சாகமூட்டிய நிகழ்ச்சியாக சக்தி வானொலின் மூலம் (கோம் சக்தி ர்ழஅந ளூயமவாi ) ஒரு வருடத்திற்கு முன்பாக மன்னார் மண்ணிலே சிவா பிறதர்ஸ் கொட்டல் மேற்தளத்தில் எல்லோருக்கும் அரைமணி நேரம் நிகழ்ச்சி தொகுப்புக்கு வழங்கி இருந்தார்கள். எனது நேர்த்தியான தொகுப்பைப் பார்த்து 1 மணிநேரம் வழங்கியிருந்தார்கள் அந்த நாளில் எனது குரல் ஒரு மணி நேரம் எல்லோர் இல்லங்களிலும் ஒலித்தது எனது கனவு ஒரளவேனும் நிறைவேறியது.




உங்கள் வாழ்வின் இனிமையான தருணம்?

எனது வாழ்வின் இனிமையான தருணம் என்றால் அது எனது மனைவியுடனான முதல் தொலை பேசியில் பேசியபோதும் முதன்முதலாய் வைத்தியசாலையில் என்னை சந்தித்த போதும் தான் என்வாழ்வை என் எதிர்காலத்தை நேரில் பார்த்தேன் என்றும் பசுமையான நினைவாய் நெஞ்சில்




மிகவும் வருந்தும் சம்பவம் ஏதும்?

1993 ஆண்டு எனது தந்தை இறந்தபின்பு எங்கள் குடும்பத்தை சுமந்தவள் எனது விபத்தின் பின் என்னைச்சுமந்தவள் நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்க முழுக்காரணமும் எனது தாயும் தந்தையுமான எனது மூத்த சகோதரிதான் என்னை காப்பாற்ற தனது சொத்துக்கள் சுகம் குடும்பம் வேலை எல்லாவற்றையும் இழந்து என்பணி செய்தவள் எல்லாவற்றையும் மீதும் நம்பிக்கை இழந்தவளாய்.......வெறுமையான வாழ்க்கையில் பொறுமையின்றி தற்கொலை செய்து கொண்டாள் 10.29.2010 எந்தப் பெரிய ஞானியும் சில நொடிகளில் எடுக்கும் முடிவுதானே தற்கொலை .
ஆகாரம் தேவையில்லை
அன்பான ஆறுதல் வர்த்தைகள் இருந்திருந்தால் என் அக்கா............




வலியும் வேதனை சோதனை தோல்வி பாதையை கொண்டிருக்கும் நீங்கள் உங்களைப் பற்றிய கருத்து?

என்னைப்பற்றி செல்லும் போது என்னை திடப்படுத்தியது ஒரு பாடல்வரி தான் அருமையானது ''உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதிதேடு'' நான் முள்;ளந்தண்டு உடைந்து நெஞ்சக்கு கீழ் உணர்வற்ற நிலையில் வாழுகின்ற வாலிபன் கழுத்தில் இருந்து ஒரு சாண் பகுதி வரை தான் எனக்கு தொடுகையுணர்வே இருக்கின்றது. மலம்இசலம் வெளியேறுவதே எனக்கு தெரியாது இந்நிலையிலும் நான் ஆரோக்கியமான மனிதன் என்றே என்னை கருதுகிறேன். இயலாமை என்பது உங்களிடம் இருக்கானால் அப்போது தான் நீங்கள் ஊனமுற்றவர்கள் ஆகின்றீhர்கள்; இயலாமை இருந்தாலும் நீங்கள் வாழ எந்தனிக்கும் போது இறைவன் உங்களுக்கு துணைபுரிவார். நீ ஒரு அடி எடுத்து வை மறு அடி எடுத்து வைக்க உனக்கு பலம் தருவேன் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும் இப்போது நான் தற்கொலை செய்ய நினைப்பதில்லை அதிககாலம் வாழ வேண்டும் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் வலிகள் ஒருவனை தாழ்த்தி விடுவதில்லை சரியாக சந்தித்தால் அது அவனை உயர்த்தி விடும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை......................





மன்னார் இணையம் வழங்கும் பயன்கள் பற்றி தங்களின்?

நிச்சயமாக ஊடாகம் ஒன்றுதான் ஒருவனை அறிமுகப்படுத்தி வெளிச்சம் போட்டுக்காட்டும் சாதனம் எந்தத்துறையாக இருந்தாலும் எவருக்கும் எதுவுமே தெரியாது ஊடகம் இல்லையென்றால் ஒன்றுதான் என்வனைப்போன்ற கலைஞர்களையும் இன்னும் ஏராளமான கலைஞர்களையும் அவர்களின் என் திறமையினை வெளிக்கொண்டுவர எடுத்திருக்கும் இப்புதுமுயற்சிக்கு எனது பாராட்டுக்களும் ஆசீர் வாதமும். எல்லா இணைபத்தளங்களையும் பார்வையிடுவேன். மன்னாரில் நடக்கின்ற முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நியூ மன்னார் இணையத்தில் பார்வையிட முடிகின்றது. மன்னாரில் பல அமைப்புக்கள் இருந்தாலும் அவற்றை எல்லாவற்றையும் விட ஒரு கலைஞனின் வீட்டிற்கே சென்று அவனின் உண்மை நிலைவரத்தை உற்று நோக்கி உலகறியச் செய்யும் மாபொரும் உன்னதச் சேவையை பாராட்டியதோடு மட்டும்மல்லாது இறைவனை பிராத்திகின்றேன்.



''தொடரட்டும் சேவை
மலரட்டும் கலைஞன் தேவை''

''வாழ்வா தாரத்திற்கு
வழிதேடிப் போகும் போது
பிச்சை கேட்பதாய்
எச்சில் வெற்றிலையை
சன்மானமாய் வழங்குகிறார்கள்
கனத்த இதயத்தோடு வீட்டுக்கு வந்து
கண்ணீரை மட்டும் இறக்கிவைக்கிறேன்.
நெஞ்சில் சுமையத்தவிர''

உதவும் கரங்கள் இருந்தால் இரங்குங்கள் இவருக்கு......

F.Benildas
A/C-100492109891

N.S.B – தேசிய சேமிப்பு வங்கி
வT.P. 077-9689972
023-3234447











கவிஞர் உள்ளுர் அறிவிப்பாளர் குறும்பட நடிகர் பி.பெனில்டஸ் தற்குருஸ் அவர்களின் அகத்திலிருந்து. Reviewed by NEWMANNAR on July 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.