பேசாலையில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்பு.
மன்னார் பேசாலை முருகன் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் இன்று (28) திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹெரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.
எனினும் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீடு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில்,மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு இன்று (28) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தர்க்கா என்ற பெயரைக்கொண்ட பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது 20 பொதிகளின் அடைக்கப்பட்ட 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டனர்.எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வியாபாரி என தெரிவித்துள்ள மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி குறித்த நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சாப்போதைப்பொருள் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவித்த பொலிஸார் குறித்த கஞ்சாப்போதைப்போருள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.டபில்யு.ஹெரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.
எனினும் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீடு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில்,மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு இன்று (28) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தர்க்கா என்ற பெயரைக்கொண்ட பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது 20 பொதிகளின் அடைக்கப்பட்ட 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டனர்.எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வியாபாரி என தெரிவித்துள்ள மன்னார் பொலிஸ் நிலையத்தின் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி குறித்த நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சாப்போதைப்பொருள் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவித்த பொலிஸார் குறித்த கஞ்சாப்போதைப்போருள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
பேசாலையில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
March 29, 2016
Rating:
No comments:
Post a Comment