மன்னாரில் கடும் வெப்பத்தின் காரணமாக திடீர் மயக்கமுற்ற பொலிஸ் கொஸ்தாபல் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற பொலிஸாருக்கு இன்று புதன் கிழமை மாலை இடம் பெற்ற பொலிஸ் அணி வகுப்பு நடவடிக்கைளின் போது கடும் வெப்பம் காரணமாக மயக்கமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியின் போது திடீர் மயக்க முற்று மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மாவட்ட போக்குவரத்துப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபலான சந்திர சேன என தெரிய வந்துள்ளது.
நேற்று முந்தினம் திங்கட்கிழமை(2) இடம் பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு இன்று புதன் கிழமை மாலை மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் குறித்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன் போது இன்றைய தினம் மன்னாரில் கடும் வெப்ப நிலை காணப்பட்ட நிலையில் குறித்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மாவட்ட போக்குவரத்துப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபலான சந்திர சேன என்பவர் திடீர் மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் அவர் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பயிற்சியின் போது திடீர் மயக்க முற்று மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மாவட்ட போக்குவரத்துப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபலான சந்திர சேன என தெரிய வந்துள்ளது.
நேற்று முந்தினம் திங்கட்கிழமை(2) இடம் பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு இன்று புதன் கிழமை மாலை மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் குறித்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன் போது இன்றைய தினம் மன்னாரில் கடும் வெப்ப நிலை காணப்பட்ட நிலையில் குறித்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மாவட்ட போக்குவரத்துப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபலான சந்திர சேன என்பவர் திடீர் மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் அவர் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னாரில் கடும் வெப்பத்தின் காரணமாக திடீர் மயக்கமுற்ற பொலிஸ் கொஸ்தாபல் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.
Reviewed by NEWMANNAR
on
May 05, 2016
Rating:
No comments:
Post a Comment