அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பொலிஸாரினால் சிங்கள மொழி பயிற்சி வகுப்பு ஆரம்பம்.Photos

மன்னார் மாவட்டத்தில் சிங்கள மொழி பயிற்சி வகுப்பு முதற் தடவையாக மன்னார் பேசாலை சென் மேரீஸ் மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(24) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்சிலி கேரத் அவர்களினால் பேசாலை கிராமத்தின் சிங்கள மொழி அறிவை அபிவிரித்தி செய்யும் நோக்குடன் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறித்த குறித்த சிங்கள மொழி பயிற்சி வகுப்பினை வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.

பேசாலை பொலிஸ் நிலையம் கடந்த சில மாதத்திற்கு முன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இநத் நிலையத்தின் முதல் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கிங்சிலி கேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கள பயிற்சி வகுப்புக்கள் குறித்த பாடசாலையில் 2ஆம், 3ஆம்,4ஆம் .ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வேவ் வேறு நேரங்களில் நடை பெற உள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட சிங்கள மொழி பயிற்சி ஆராம்ப நிகழ்வில் பாடசாலை அதிபர் செபஸ்ரியான் ராயேஸ்வரன் பச்சேக், பேசாலை பொலிஸ் வநிலைய பொறுப்பதிகாரி கிங்சிலி கேரத் உற்பட பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




-மன்னார் நிருபர்-
(25-05-2016)








மன்னார் பேசாலை பொலிஸாரினால் சிங்கள மொழி பயிற்சி வகுப்பு ஆரம்பம்.Photos Reviewed by NEWMANNAR on May 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.