பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்
சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் பிரிந்தது. சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர். நா. முத்துக்குமார் 1500-க்கும் அதிகமான பாடல்களை எழுதிஉள்ளார். 41 வயதாகிய நா. முத்துக்குமார் 2 முறை தேசிய விருது வாங்கிஉள்ளார். தங்க மீன்கள் மற்றும் சைவம் படத்தில் அவர் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு... அழகு... பாடலுக்கும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றவர். தமிழக அரசு விருதையும் வாங்கிஉள்ளார்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கடந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இயக்குநர் ஆகவேண்டும் என்று தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர், சிறந்த பாடலாசிரியர் ஆனார். அவருடைய இறப்பு திரையுலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. முத்துக்குமார் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதிஉள்ளார். புத்தகங்களையும் எழுதிஉள்ளார். நா. முத்துக்குமார் இறப்பிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என்று கங்கை அமரன் கூறிஉள்ளார். கவிஞர் நா.முத்துக்குமார் மரணம் எழுத்து உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று இயக்குநர் விக்ரமன் கூறிஉள்ளார். தமிழ் திரையுலகிற்கு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்று உள்ளார் என்று திரைஉலகினர் கண்ணீர் மலங்க இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நா.முத்துக்குமார் மரணம் மிகுந்த வேதனையை தருகிறது என்று சமுத்திரகனி கூறிஉள்ளார்
பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்
Reviewed by NEWMANNAR
on
August 14, 2016
Rating:
No comments:
Post a Comment