தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி மன்னரைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி.Photos
தலைமன்னாரில் இருந்து நேற்று(4) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் புதுக்குடியிப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான முஹம்மது நஜிபுதீன் (வயது-29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலைமன்னாரில் இருந்து நேற்று (4) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்துடன் தலைமன்னார்-மன்னார் பிரதான வீதி சின்னக்கருசல் பகுதியில் உள்ள புகையிரத வீதியிலே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை சடலத்தை கண்ட கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டதோடு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி மன்னரைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி.Photos
Reviewed by NEWMANNAR
on
November 05, 2016
Rating:
No comments:
Post a Comment