மன்னார் பிரதேச கலை இலக்கியப்பெரு விழா-29-12-2016
இன்று 29-12-2016 மாலை 2-30 மணியளவில் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி நாவலர் மண்டபத்தில் ஔவையார் அரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்விற்கு கே.எஸ்.வசந்தகுமார் அவர்கள் தலைமை தாங்க
பிரதம விருந்தினராக
எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்களுடன்
சிறப்பு விருந்தினர்களாக.....திரு.வி.பபாகரன் உதவி மாவட்ட செயலாளர் மன்னார்
திரு.த.தனேஸ்வரன் அதிபர் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
திரு.எக்ஸ்.எல்.றெனால்டோ செயலாளர் நகரசபை மன்னார்
வைத்திய கலாநிதி திரு.மு.கதிர்காமநாதன்
இவர்களுடன் வைத்திய கலாநிதிகள் ஓய்வு பெற்ற பொறியியலாளர் வங்கி முகாமையாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் அரச அதிகாரிகள் அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் சந்தன மாலை அணிவித்து வரவேற்று மங்கல விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து மாணவிகளால் இசைக்கப்பட நிகழ்வு மங்கலகரமாக ஆரம்பமானது.
வரவேற்புரையினை திருமதி பு.மணிசேகரம் அவர்கள் வழங்க அரங்க திறப்புரையினை நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன் வழங்க வரவேற்பு நடனம் மயில் நடனம் பரத நடனம் சிறப்பு கவியரங்கம் தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமையில் மன்னார் மண்ணின் சிறந்த ஏழு கவிஞர்கள் கலந்து சிறப்பிக்க
நூல் வெளியீட்டுரையினை மஹா.தர்மகுமாரகுருக்கள் வழங்க
நூல் நயவுரையினை ஆசிரியர் டிலாணி வழங்கினார்.
நன்றியுரையினை கலாசார உத்தியோகத்தர்கள் அபிராமி மற்றும் சுகிர்தா வழங்க நிகழ்ச்சி தொகுப்பினை கிராம சேவகர் ராதா பெர்ணான்டோ அவர்கள் வழங்கினார் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்னார் பிரதேச கலை இலக்கியப்பெரு விழா-29-12-2016
Reviewed by Author
on
December 29, 2016
Rating:
No comments:
Post a Comment