அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கனில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன திணைக்களம் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் முனி சொய்சா தலைமையில் திறந்து வைப்பு.📷

மன்னார் முருங்கனில் புதிதாக அமைக்கப்பட்ட நீர்ப்பாசன திணைக்களம் இன்று சனிக்கிழமை(17) காலை நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் முனி சொய்சா அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.வீரசிங்கம் அவர்களின் அழைப்பிற்கினங்க,நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டப்ளியு.ரத்நாயக்கா அவர்களின் பங்களிப்புடன் குறித்த நீர்ப்பாசன திணைக்களம் இன்று(17) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் முனி சொய்சா அவர்களுடன் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

முருங்கனில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட குறித்த நீர்ப்பாசனத்திணைக்களமானது முருங்கன் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகமாகவும்,பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகமாகவும் செயற்படும்.


குறித்த நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள் விவசாய திணைக்கள பிரதி நிதிகள்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,கட்டுக்கரை குளம் திட்ட முகாமைத்துவ குழு பிரதி நிதிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

-இதன் போது கலந்து கொண்ட விவசாய அமைப்பின் பிரதி நிதிகள் விவசாயிகள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.

-மன்னார் நிருபர்-
(17-12-2016)













மன்னார் முருங்கனில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன திணைக்களம் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் முனி சொய்சா தலைமையில் திறந்து வைப்பு.📷 Reviewed by NEWMANNAR on December 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.