அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நீதி மன்றத்தின் தடையை மீறியும் சுதந்திர தினத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம். (படம்)

மன்னார் நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு அமைவாக தமது அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினமான இன்று (4) சனிக்கிழமை மதியம் கருப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினமான இன்று (4) சனிக்கிழமை மன்னாரில் மேற்கொள்ளப்படவிருந்த கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் நேற்று (3) வெள்ளிக்கிழமை மாலை தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

-இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பின்னடைவு என தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெறவிருந்த கை விலங்கிட்டு கறுப்புக்கொடிப் போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிரப்பித்துள்ளது.

-எனினும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை கட்டளை பிரப்பித்துள்ள போதும் சட்டத்தை மீறாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துளள்து.

-அதற்கு அமைவாக மன்னார் பிராதன வீதியில் உள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புகக்ளின் ஒன்றியத்தின் முன் பகுதியில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினமான இன்று சனிக்கிழமை மன்னாரில் தமது வண்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.





மன்னாரில் நீதி மன்றத்தின் தடையை மீறியும் சுதந்திர தினத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம். (படம்) Reviewed by NEWMANNAR on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.