அண்மைய செய்திகள்

recent
-

மாண்புறு மகளிர் தினம்.....08 அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் சிறப்பு பார்வை


அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்-08-03-2017
HAPPY WOMEN'S  DAYS
மாண்புறு உலகில் மகத்தான தினங்களில் மனிதர்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய தினம் மார்ச்-8 மகளிர் தினம் தரணியில் நாம் வாழக்காரணமான நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் மகளிர்களுக்கான தினம் அவர்களின் சாதனைகள் சரித்திரங்கள் சோதனைகள் வேதனைகள் என்பனவற்றை எண்ணி உணரவும் உதவவும் உண்டான உன்னத தினம் தான் இந்த மகளிர் தினம்.

மகளிர்க்கு மட்டும் என்று பத்திரிகையில் பார்த்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம் மகளிர் என்றால் யார் பெண்தான் ஆம் நம் தாய் தங்கை தமக்கை சித்தி அம்மம்மா பெரியம்மா எனத்தொடரும் உறவுகளும் சொந்தங்களும் அது போல நண்பி தோழி ஆசிரியை அன்ரி எனத்தொடரும் அயலவரும் சமூகமாய் வாழ்ந்து கொண்டும் வாழவைத்துக்கொண்டும் இருக்கும் பெண்களுக்கான நம் நாடடின் கணகளுக்குத்தான் மார்ச்-8 மகளிர் தினம். பெண்களை பெருமைப்படுத்தவே…..


பெண்களின் எட்டு பருவங்கள்

7வயது வரை-பேதை
8-11 வயது வரை-பெதும்பை
12-13 வயது வரை-மங்கை
14-19 வயது வரை-மடந்தை
20-25 வயது வரை-அரிவை
25-31 வயது வரை-தெரிவை
32-55 வயது வரை-பேரிளம் பெண்
56-முதல் இறக்கும் வரை விருத்தை 

பெண்களின் 7 வகை
பத்தினி--சித்தினி--சங்கினி--அத்தினி--மான்ஜாதி--பெட்டைக்குதிரை-பிடியானை எனவும்
பெண்ணுக்கு 5வகை அனுபவம் கண்டு-கேட்டு-உண்டு-உயிர்த்து-உற்று அறியும் அனுபவம் என்கிறார் வள்ளுவர் ஆறாவது அனுபவமாக அவள் அழகை பேசிமகிழ்வது பெண்களின் குணமாம் இவ்வாறு சொன்னவர்கள் இதோடு நின்று விடவில்லை பெண்களுக்கே உரிய பாரம்பரியமாக விதிகளாக தேவையானவையாக அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு என தமிழ் இலக்கணமும் தமிழர் பாரம்பரியமும் வரையறுத்தள்ளது.

அச்சம்-அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல்
மடம்-கொண்ட கொள்கையை விடாத தன்மை
நாணம்-தீய செயல்கள் செய்ய அஞ்சுதல்
பயிர்ப்பு- பெண்மை இயல்பை எக்காலத்திற்கும் காப்பாற்றும் தன்மை
இப்படியாக பெண்ணின் பெருமை பேசவந்த தமிழ் தென்றல் திரு.வி.கா பெண்ணின் பெருமையே இம் மண்ணின் பெருமை என்றார.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீராது என்றார் பாவேந்தன் பாரதிதாசன். கற்பு என்பது தனது உறுதியான நிறைகுணங்களை காப்பதே சிப்பாக பிறர் நெஞசு புகா மாண்பு எனலாம்.
“சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலையென்பது” வள்ளுவர் வாய்மொழி. பெண்டிற்கு அழகு தருவது உண்ணும் உணவை குறைவாக உண்பதே “பெண்டிற் அழகு உண்டி சுருங்குதல்”என்பது ஒளவையாரின் அமுத வாக்கு.


பெண்ககளின் கற்பு என்று வரும்போது பாரதி பெண்ணுக்கு மட்டும் தான..? ஆணுக்கும் வேண்டும் என்று வலியுறத்துகிறான். கற்பு நிலை என்றால் அதை இருவருக்கும் பொதுவில் வைப்போம் என்றானே பாரதி…!   மனித உரிமைகள் சகல மனிதர்க்கும் உரியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க சகலருக்கும் உரிமையுண்டு அது மானிடவர்க்கத்தின் பிறப்பிடமாக விளங்கும் பெண்களுக்கும் சமஉரிமையுண்டு தானப்பா பெண்ணியம் பெண்விடுதலை எனும் போது ஆனாதிக்கம என்ற வார்த்தை இல்லாமலா…


பெண் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்றுக்கொள்கின்ற அனைத்தப்பாத்திரங்களுக்கும் அக்காலம் தொட்டு இக்காலம் வரை சமூகத்தினாலும் பாரம்பரியத்தினாலும் உண்டாக்கப்பட்ட எழுதப்படாத சட்ட திட்டங்கள் ஏராளம் எண்ணிலடங்காதவைகள் உள்ளன. ஆண் பெண் என்பது உயிரியல் அடிப்படையிலானதாகும் உடலியல் சார்ந்ததும் பிறக்கின்ற மனிதக்குழந்தைகள் அவர்களின் பிறப்புறுப்க்களின் மூலம் தான் இனங்காணப்பட்டு வளர வளர அப்பெண்குழந்தைக்கான பாரம்பரிய சம்பிரதாயங்கள் பிண்ணப்படுகின்றன வலையில் சிக்கிய மீனைப்போலவே பெண்கள் வாழவேண்டிய நிலையாகின்றது.

ஆண்களின் ஆதிக்கம் ஆணாதிக்கம் ஆனது இன்றல்ல அந்தக்காலத்தில் இருந்தே “அடுப்படி கடப்படி வாயிற்படி” தாண்டாமல் வாழவேண்டும். அப்படி தாண்டினால் அவள் கற்பற்றவள் அகிவிடுவாள் அதன் பின்பு அந்தச் சமுதாயத்தில் வாழவே முடியாது கூடப்பிறந்த அண்ணன் அல்லது தகப்பனாலேயே சமூதாயத்தின் தீர்ப்பின் படி தண்டணையாக நஞ்சூட்டிக் கொலை அடித்துக் கொலை கல்லெறிந்து கொலையென தொடரும் கொளைக்களம்.

கல்யாணம் ஆகிவிட்டால் கழுத்தில் தாலி நெற்றியில் குங்குமப்பொட்டு காலில் மெட்டி மூக்கில் மூக்குத்தி குனிந்ததலை நிமிராத நடை இன்னும் ஏராளம் இவைகள் தான் ஆரம்ப அடிமைத்தனம. ஆண்களுக்கு இவை எதுவுமே கிடையாது. பெண்களுக்குத்தான் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று பெண்ணியம் எனும் உருவெடுத்து விருட்சமாய் நிற்கிறது. சூபீட்சத்தை தேடுகிறது…

“ஆவதும் பெண்ணாலே உலகம் அழிவதும் பெண்ணாலே” என்ற பாட்டிற்கு ஏற்ப மனித வரலாறகட்டும் ஏன் எந்த இதிகாசமோ......! புராணமோ.....! காப்பியங்களோ.......! பெண்ணில்லாமல் இல்லை வரலாறே பெண்தானே அக்காலத்தில் அடிமைத்தனம் இருந்தாலும் பெண்கள் பல வழிகளில் பாண்டித்தியம் பெற்று வாழ்ந்து இருக்கின்றார்கள்  கம்பன் பார்வையில் பெண் கல்வி
“பெருந்தடக்கண் பிறை நூதலார்க்குகெல்லாம் பொருந்து செல்வமும் கல்வியும் புத்தியால்” என்பது கம்பன் கவிதை கோசல நாட்டில் மகளிர்க்கு சொத்துரிமை இருந்ததோடு கல்வியிலும் மேலோங்கி இருந்ததாக கம்பன் குறிப்பிடுகிறான். ஆயக்கலைகள் 64ம் கற்ற பெண்பாற்புலவர்கள் 30ற்கும் மேற்பட்வர்கள் இருந்துள்ளனர் அதிலும் சிறப்பாக தமிழ் நாடு போர் இன்றி இருக்க சமாதான தூதுவராக ஒளவையார் செயற்பட்டுள்ளதை சங்ககாலத்து புறநானூறு கூறுகிறது. ஒளவையாரின் தமிழ் புலமைக்கும் ஆளுமைக்கும் சான்று அதியமன் தன் தவத்தினால் கிடைத்த என்றும் சாக வரமுடைய அதிசய நெல்லிக்கனி கதையும் உண்டல்லவா…


இன்று பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அரசசபைகளிளும் அதிஉயர்ந்த பதவிகளிளும் அடுப்படியில் இருந்து அன்று நிலம் பார்த்த பெண்கள்  இன்று நிலாவில் விண்வெளியில் உலா வருகிறார்கள். ஆண்களுக்கு சரிநிகராய் பெண்களாளும் சாதிக்க முடியும் என்று சாதித்து காட்டுகிறார்கள் சாதித்தும் வருகின்றார்கள் பெண்கள் இல்லாத துறையே இல்லை இப்போது பெண்களின் அதீத வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சில ஆண்களும் உண்டு நல்ல துணையுமுண்டு பெண்கள் அதீத சக்தி வாய்ந்தவர்கள் ஆதலாலே சக்திகள் என அழைக்கப்பட்டனர் பெண்களின் வீரம் பற்றியும் தகுந்த நேரத்தில் நிதானமாய் முடிவெடுப்பவர்கள் அதற்கு சாட்சியாக கலைக்கு வாணியாக சரஸ்வதியும் வீரத்திற்கு துர்க்கையும்  செல்வத்திற்கு இலட்சுமியும் நிலமும் பெண்தான் கங்கை காவிரி ஜமுனா எல்லாமே பெண்தான் பெண்களை தெய்வமாக இந்தியாவில் வழிபடுகிறார்கள் தப்பில்லை ஏன் என்றால் ஒவ்வொரு “தாயும் தெய்வம்” தான் பெண்ணின் பெருமையே தாய்மைதானே.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னூல் பெண் நிச்சயமாக இருக்கின்றாள் பெண்ணடிமை எதிர்த்த பெரியாருக்கும் மகாகவி பாரதியாருக்கும் மகாத்மா காந்திக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் ஏன் எமது விடுதலை இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இன்னும் வரலாறு பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவர்களுக்கு பின்னாலும் பெண்கள் உள்ளனர் தாயாக தாரமாக தங்கையாக நண்பியாக பல பாத்திரங்கள் ஏற்று பாரிய சேவை செய்துள்ளனர் செய்தும் வரகின்றனர்.

 வலாற்றுப் பக்கங்களை புரட்டிப்பார்ப்போமானால் தனியே நின்று சாதித்த பெண்களாக கனவனுக்காக போராடிய சாவித்திரி கற்புக்கு இலக்கணமான சீதை கண்ணகி புராணங்களிலும் அன்பின் உருவமாய் அன்னைத்திரேசா விண்வெளியில் கரைந்த கல்பனா சாவ்லா-புளோறன்ஸ் சீமாட்டி பக்தி மீரா பட்டத்தரசி ஜான்சிராணி பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்த குட்டிப்பெண் மலால ஒரு கிலோ தங்கத்தை அநாதைக்குழந்தைகளுக்கு அளித்த ஈழச்சி ஜெஸிக்கா இலங்கைக்கு புகழ் சேர்த்த முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளான சிறிமாவோ பண்டாரநாயக்க சந்திரிக்கா குமாரதுங்க இந்தப்பட்டியல் இக்காலம் வரை இன்னும் ஆரோக்கியமாய் நீள்கிறது.

                                                                                   
இந்த மகளிர் தினம் எவ்வாறு உருவாயிற்று பழங்காலத்தில் கிரேக்கப்போரை முடிவுக்கு கொண்டுவரப்போராடினார்கள் பெண்கள் பிரேஞ்சுப்புரட்சியின் போது பெண்கள் சுகந்திரம் சமத்துவம் கேட்டு போராட்டம் வலுக்க அதிகாரவர்க்கத்தன்மை கொண்ட மன்னன் லூயிஸ் பிலிப்பு முடி துறந்தான். இச்செய்தி ஐரோப்பா நாடெங்கும் பரவியது கிறீஸ்ஸில் லிசிஸ்ட்டா தலமையிலும் ஜேர்மனி ஒஸ்த்தியா டென்மார்க் போன்ற நாடுகளிலும் இத்தாலியிலும் பெண்கள் நீண்ட காலமாக கோரிக்கையினை முன்வைத்து போராடினார்கள் தங்களுக்கு வாக்குரிமை வேண்டும். ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினர் பிரான்சில் புருஸ்ஸியஸ் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசசபை ஆலோசனைக்குழுவிலும் இடம் பெறச்செய்து பெண்களுக்கு வாக்குரிமையளிக்கவும் ஒப்புதல் தந்தான் அந்த நாள் தான் 1848ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதியாகும்.


1945ல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த உடன் படிக்கையில் சம உரிமை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டு சர்வதேச அளவில் பெண்களுக்கான இயக்கங்கள் வளர்ச்சி பெற்றன இவ்வளர்ச்சியின் பயனாக பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சட்ட நடவடிக்கைகள் பொதுக்கருத்துக்கள் உருவாக்குதல் சர்வதேச நடவடிக்கைகள் பயிற்சிகள் ஆராய்ச்சிகள் வழிகாட்டி செயற்பட்டு வருகின்றது. தேசிய மனித உரிமை ஆணையம் விதவை என்கிற வார்த்தை பிரயோகிக்க வேண்டாம் என்கிறது. விதவைக்கு பொட்டில்லை அந்த வார்த்தை “விதவை” பொட்டில்லை மாறாக “கைம்பெண்” என்று சொல்லுங்கள் ஒரு பொட்டுப்போனாலும் மறு பொட்டு இட்டுக்கொள்ள முடியும் என்பதற்காய்.

 18ஆம் நூற்றாண்டிலேயே பெண்விடுதலைச் சிந்தனைகள் எழுச்சி பெற்றிருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் தான் பெண்ணியம் தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. மேலைத்தேசம் கீழைத்தேசம் எங்கும் பெண்ணொடுக்குமுறை இருந்த காலம் கடந்து இன்று உலகின் மூலைமுடக்கெங்கும் பெண்கள் தம் உரிமைகளுக்குப் போராடும் நிலையில் வெற்றி கண்டும் வருகின்றார்கள். இனம், மதம், மொழி, கலாசாரம், சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் பலதரப்பட்டவர்களாய் இருந்த போதிலும் பெண்கள் எனும் அடையாளத்தால் ஒன்றுபட்டு நிற்கும் பெண்ணினம் சமூகநீதி, சமவுரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காக ஒன்றுதிரண்டு அகிலமெங்கும் குரல் கொடுக்கும் நாள் இப் பெண்கள்தினம்.


முதலாவது மகளிர் தினம் மார்ச் 19-1911 கொண்டாடப்பட்டது.
உலகில் உள்ள ஏறத்தாள 3கோடி அகதிகளில் 80 முதல் 85 வீதம் வரை பெண்கள்தான்
தினமும் பிரசவத்தின் போது 1600 பெண்கள் மரணமடைகிறார்கள்
சு10வீடன்-கனடா-நோர்வே-அமெரிக்கா-பின்லாந்து போன்ற நாடுகளில் பெண்கள் ஆயுள் கல்வி வருமானம் என்பவற்றில் முன்னேறியுள்ளனர்.
பெண்களுக்கு வாக்குரிமையளித்த நாடுகளில் முதன்மையானது நியூசிலாந்து 1893 இல்
இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டில் தலமைப்பொறுப்பை ஏற்றுள்ளனர் இது 14.1வீதமாகும்
சு10விடனில் 1998ல் அமைச்சரவையில் பெண்களுக்கு சமவிகிதத்தில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
1975ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
1977ம் ஆண்டு தான் பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
1909ம் ஆண்டு தான் பெண்கள் தினமாக அமெரிக்காவில் 28-2-முன்பு அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கின்றன 1.5 மில்லியன் பெண்குழந்தைகள் பிறந்த தினமே இறக்கின்றனர்.விருப்பமின்மையால்  5வயதிற்குள் பல பெண் குழந்தைகள் இறந்து விடுகின்றனர்.
உலகில் 5கோடியே 20 இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் பணிப்பெண்களாக உள்ளனர்.


இலங்கையைச்சேர்ந்த 18 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக உள்ளனர்.
சீனா ஜப்பான் கொரியா இந்தியா போன்ற நாடுகளில் மத மூடநம்பிக்கைகளினால் பெண்குழந்தைகள் கொள்ளப்படுகின்றனர்.
இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றது அதில் 10 வீதம் சட்டரீதியானது.
உலகத்தில் நான்கில் ஒரு பெண் குடும்பத்தலைவியாக உள்ளாளனர்.
உலகில் பெண்கள் வாழ மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்த்தான்- பாகிஸ்த்தான் கொங்கொங் இன்னும் பல நாடுகள் உள்ளன
உலகில் 245மில்லியன் விதவைகள் “கைம்பெண்” உள்ளனர்
இலங்கையில் யுத்தத்தம் முடிந்த ஒரு இலட்சம் பெண்கள் விதவைகளாக….?

போரின் பின்பான காலங்களில் தமிழீழத்தில் இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. 90ஆயிரத்துக்கும் மேட்பட்ட பெண்கள் விதவைகளாகவும்; ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்க இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் மக்களால் முடிவதில்லை. வன்முறைக்கு உட்படுத்தபட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் குடும்பத்தினரும் அவர்களது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் .

தற்போது இலங்கயில் பெண்களின் நிலை

  • பொதுப்போக்கு வரத்தில் 90% பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள்
  • வேலைக்கு செல்லும் பெண்கள் 50%
  • கல்வியினை பெறும் பெண்கள் 28%
  • பொருளாதார செயல்திறன் மிக்க வயதுப்பிரிவில்  தொழிலில் ஈடுபடும் பெண்கள் 34%
  • பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் தீர்வுகள் பற்றி அறியாதவர்கள் 74%
பெண்கள் வீட்டிலும் நட்டிலும் பல்வேறு சொல்லமுடியாத துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள் இந்த கணக்கெடுப்பு எல்லாம்  விட்டுவிட்டு பெண்களும் ஏனையோரும் விழிப்படைய வேண்டும்.
  
 இயல்பாகவே பெண்கள் மென்னையானவர்கள் பெண்களிடமே கருணை அன்பு பணிவு சகிப்புத்தன்மை தாய்மை புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு தியாகம் அனைத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டவளாக பெண் காணப்படுகின்றால் அவளால் தகுந்த பாதுகாப்பின்றி துணையின்றி வாழமுடியாத நிலை பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நாட்டிலும் இதைசாதகமாகப்பயண்படுத்தும் ஆண்கள் பல ஆண்கள் தன்னிலை மறக்கும் போது பெண்கள் பாதிப்படைகிறார்கள்.


பெண்கள் பொதுவாக காதல் வலையில் காமூகர்களிடமும் சொல்ல முடியாத இம்சைகள் பாலியல் வன்கொடுமைகள் வறுமை-பொருளாதாரக்கொடுமைகள் சீதனக் கொடுமைகள் நவநாகரீக போகவாழ்க்கையினாலும் மோகத்தினாலும் கவர்ச்சிப்பொருளாய் நுகர்வுப்பொருளாய் இரண்டாவது பிரiஐயாக இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப்படுவதும் வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதும் உடமைப்பொருளாக்கப்படுவதும் பொதுவுடமையாகிப்போயுள்ளது பெண்ணினம்.  மனிதன் என்னும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலகாலமாக இரண்டறக்கலந்தபடியும் பிள்ளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாக பெண் தனது சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப்பட்டபடியும் இருந்திருக்கிறார்கள்.

இருந்தும் வருகின்றார்கள்.  பெண்களுக்கான மனித இருப்புக்கள் சமூகம் கலாச்சாரம் பண்பாடு என்றும் மறுக்கப்பட்டபடியே உள்ளது சடங்கு சம்பிரதாயம் எனும் பாரம்பரியக் கிடங்கில் பெண்களை தள்ளிவிட்டு எள்ளிநகையாடும் மனிதவர்க்கமே ஏன் இந்த கொலை வெறி…!
இக்கொடிய நிலை மாற மகளிர் வெற்றிக்கொடி ஏற… பெண்கள் தங்களை தங்களில் இருந்து அறிந்து கொள்ள வேண்டும் தங்களை முதலில் ஆளவேண்டும் அழுவதைவிட்டு அத்தனையும் கைக்கொள்ள வேண்டும் அண்டமும் கண்டமும் தாண்டு வாழ் ஆயுள் நீண்டு மீண்டு மீண்டு…

ஆண்களே உங்களுக்கு…

பெண்……
கவிதை வடிக்கவும்
கண்ணடித்து காதலில்
கட்டிப்பிடிக்க கட்டிலில்….எண்
 உன் வாழ்வின் கண்

பெண்களே உங்களுக்கு….

உறுப்புக்கள் இல்லையேல் ஊனம்-நீ
உடையணிந்தும் போகுதே மானம்
உன்னில் தானே உண்டு “தாய்மை” குணம்
உணரவில்லையா இன்னும் உன் மனம்….

 கவிஞர் வை-கஜேந்ந்திரன்










மாண்புறு மகளிர் தினம்.....08 அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் சிறப்பு பார்வை Reviewed by Author on March 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.