அண்மைய செய்திகள்

recent
-

இ.போ.ச. மன்னார் சாலைக்கு 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் முகாமையாளராக நியமிக்கப்பட்ட போதும் நியமனம் திடீர் இரத்து???

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17)இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் என்பவரே இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.லெம்பேட் மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை அலுவலகத்தில் கடந்த புதன் கிழமை 15 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஒப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

-இந்த நிலையில் குறித்த நியமனத்தை இரத்துச் செய்ய தொடர்ச்சியாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தது.

-இந்த நிலையில் 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நியமனத்தை குழப்பியடிக்கும் வகையில் அமைச்சர் ஒருவர் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

-இந்த நிலையில் ஏற்கனவே இருந்த முகாமையாளரை மீண்டும் நியமிப்பதற்கு குறித்த அமைச்சர் துரித முயற்சிகளை முன்னெடுத்து வவுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

-இந்த நிலையில் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமையாளரின் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவையின் வடமாகாண மனிதவள முகாமைத்துவப்பகுதியூடாக நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் சாலைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த கடிதத்தில் தரம்v பதவிக்கு உயர்த்தப்பட்டு மன்னார் சாலையில் சாலை முகாமையாளர் பதவிக்கு நியமித்து உங்களுக்கு வழங்கப்பட்ட சம இலக்கம் கொண்டு 07-03-2017 அன்று வழங்கப்பட்ட கடிதம் உடனடியாக நடைமுறைப்படுத்துவம் வகையில் இரத்துச் செய்கின்றேன்.

அதன் பிரகாரம் நீங்கள் இதற்கு முன்னர் இருந்த பதவியிலும்,தரத்திலும் ஈடுபட வேண்டும் என்பதை மேலும் அறியத்தருகின்ற போது மேற்படி பதவிக்கு சொந்தமான கடமை நடவடிக்கைகளை முறைப்படி மன்னார் சாலையில் முன்பிருந்த சாலை முகாமையாளரிடம் பாரமளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


-மன்னார் நிருபர்-
(18-03-2017)

இ.போ.ச. மன்னார் சாலைக்கு 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் முகாமையாளராக நியமிக்கப்பட்ட போதும் நியமனம் திடீர் இரத்து??? Reviewed by NEWMANNAR on March 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.