அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் 32ஆவது நாளாக தொடரும் போராட்டம்

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை கடந்த முறை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன், கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும், அதுவரை தமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் செயற்பாட்டில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் செயன்முறையும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 32ஆவது நாளாக தொடரும் போராட்டம் Reviewed by NEWMANNAR on March 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.