அண்மைய செய்திகள்

recent
-

மகளைக் கழுத்தறுத்து கொன்று உடலை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை....


இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளை கொன்று காதலனின் வீட்டு வாசலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் வீட்டில் இருக்க சிறுமியின் தாய் திடீரென வீட்டில் நுழைந்து அதிரச்சியடைந்துள்ளார்.

பின்னர், சிறுவனை பொலிசில் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்த சிறுமியின் தந்தை, வீட்டிற்கு வந்த மகளின் கழுத்தறுத்து உடலை காதலனின் வீட்டு வாசலில் வீசியுள்ளார்.

தற்போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இருவர் குடும்பமும் முஸ்லிம் மதத்தினராக இருந்தாலும் ஒரே சமூகப்பிரிவை சேர்ந்வர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் நம்பிக்கை படி ஒரே சமூகப்பிரிவில் திருமணம் செய்யக்கூடாது என்பதாகும்.
மகளைக் கழுத்தறுத்து கொன்று உடலை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை.... Reviewed by Author on March 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.