அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்.படம்

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 6 ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முள்ளிக்குளம் பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சி. பாஸ்கரா, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் றீகன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதன் போது மக்களுடன் கலந்துரையாடும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.அதற்கு எங்களினால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது.

-மக்களின் தொடர் போராட்டங்களின் மத்தியிலே கேப்பாப்புலவு பகுதியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் தமது நிலங்களை மீட்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அந்த வகையிலே முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
காணிகளை விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்தார்.

தமது நிலங்களை மீட்க முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 6 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.

மக்கள் கூடாரங்களை அமைத்து அவ்விடத்திலேயே உணவையும் சமைத்து உண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

-தமது நிலம் மீட்கப்படும் வரை தமது உரிமைப்போராட்டம் தொடரும் எனவும் எங்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,மாகாண அமைச்சர்கள், உள்ளிட்டோர் பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது பூர்வீக நிலமான 7 தலைமுறைகளைக்கொண்ட முள்ளிக்குளம் பூர்விக கிராமத்தை மீட்டுத்தர அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





மன்னார் நிருபர்
(28-03-2017)










மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்.படம் Reviewed by NEWMANNAR on March 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.