அண்மைய செய்திகள்

recent
-

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் தேவையா?


மாகாண சபைகள் அமைக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை அது பற்றி பலவிதமான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைகளினால் எதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதையிட்டும் அதன் செயல்பாடுகளை எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தாது குறுகிய நோக்கத்துக்காக தங்கள் கருத்துக்களை பலர் முன்னர் இருந்தே தெரிவித்து வந்துள்ளார்கள்.

புதிய அரசியல் அமைப்போடு மாகாண சபை என்னும் தலைப்பு மீண்டும் அரங்கத்துக்கு வந்துள்ளது. அது தொடர்பான கருத்துகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

கேள்வி: மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போதுமானதில்லையா?

பதில்: இங்குள்ள ஆரம்ப தவறுதான் இது. இதன் விடயங்கள் கட்டுக்கோப்பு, நடுநிலை, இணைந்த என்ற மூன்று விடயங்களாக பிரிந்து இருப்பதாகும். கட்டுக்கோப்புடையவர்களை இணைந்தவர்கள் ஆக்குகின்றோம். இணைந்தவர்களை கட்டுக்கோப்புடையவர்கள் ஆக்குகின்றோம்.

மாகாண சபைகள் செய்யும் வேலையை மத்திய அரசும் செய்கின்றது. மத்திய அரசு செய்யும் வேலையை மாகாண சபைகளும் செய்கின்றது.இதன் மூலம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் சரியான முறையில் அதிகாரத்தை பரவலாக்கம் செய்யாமல் பிரித்து வேறுபடுத்தாததாகும். நாம் இவை எங்குள்ளன என்று நினைத்து சட்டங்களை தயாரித்து நடவடிக்கையில் ஈடுபடும்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர சுற்றுநிருபர்கள் மூலம் மத்திய அரசு பலவற்றை சுவீகரிக்கின்றது. உதாரணமாக விவசாய சேவைகள் என்பது பரந்துபட்ட விடயமாகும். ஆனால் கடந்த காலங்களில் அதாவது இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு தனக்குக் கீழ் கொண்டு வந்தது.அது அரசியல் அமைப்புக்கு உட்பட்டதல்ல.

அரசியலமைப்பில் உள்ளதை மாற்ற வேண்டும் என்றால் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல் தற்போது பல அமைச்சுக்களினூடாக இவை நடைபெற்று வருகின்றன. அதனால் அதிகாரத்தை சரியான முறையில் வழங்க வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி: இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் என்ன?

பதில்: மாகாண சபைகளுக்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை நிதி கிடைக்கவில்லை. அதனால் செய்ய வேண்டியிருந்த எவ்வித நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. அதற்காக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். அதனால் இவ்வாறான சிரமங்களுக்கு நாம் முகம்கொடுக்கின்றோம்.

கேள்வி: இதற்கு தீர்வாக எவ்வாறான யோசனைகளை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்?

பதில்: கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தி உறுதியாக வழங்குவதாகும். உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கு பிராந்திய அரசாங்கங்களுக்கு சுயாதீனமாக நடவடிக்கையில் ஈடுபட இடமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இது இந்தியாவில் இருந்து வந்தாலும் இங்கு அவ்வாறில்லை. அனைத்துமே மத்திய அரசாங்கத்தினூடாக நடைபெறுகின்றது.சரியான முறை என்னவென்றால் கொள்கைகளை திட்டமிட மத்திய அரசாங்கம் முன்னின்று செயல்பட்டு அதனை நிறைவேற்றும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும்.

தற்போது பிரதேச சபைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக நாம் விசாரணை மற்றும் ஆய்வுகளை செய்கின்றோம்.ஆனால் அதன் நடவடிக்கைகளில் மாகாண சபை தலையீடு செய்யாது சுயாதீன நிறுவனமாக பிரதேச சபை அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பரவலாக்கம் என்னும் விடயத்தின் அர்த்தம் பரவலாக்கம் தானே. அதனால் அதிகாரத்தை புதிதாகப் பெறுவதை விட தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரியான முறையில் வழங்கி சுயாதீனமாக மாகாண சபையில் நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்க வேண்டும்.

கேள்வி:
நீங்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் தொடர்பாக அதிகாரம் தேவை என எண்ணுகின்றீர்களா?

பதில்: மாகாண சபைகளுக்கு ஏன் பொலிஸ் அதிகாரம்? யுத்தம் புரியவா? உண்மையில் பொலிஸ் அதிகாரம் சிவில் பாதுகாப்பை வழங்கவே தேவைப்படுகின்றது. அதற்கு குண்டாந்தடியை கொண்டு செல்வது தவிர ரி-56 ஐ கொண்டு செல்வதல்ல. அது பிரதேச பரிபாலனத்திடம் இருக்க வேண்டும்.

காணி உரிமை தற்போது மாகாண சபைகளிடமே உள்ளது. ஒரு விடயம் எமக்கு தேவையானவாறு வெளியாட்களுக்கு கொடுக்க முடியாது. அரச காலத்திலிருந்தே உள்ள சட்டம் என்னவென்றால் ஒரு காணியை இன்னொருவருக்கு வழங்குவதாயின் அதனை அவராலேயே வழங்க முடியும். அது இன்னுமுள்ளது.

பரிந்துரையை மாகாண சபை வழங்கும். அதை அந்நியருக்கு வழங்குவது தொடர்பாக முடிவுக்கு கையொப்பம் இடுவது ஜனாதிபதியேயாவார். ஆனால் இங்கு அதிகாரம் கேட்கப்படுவது மாகாண சபைகளுக்கு தேவையான விதத்தில் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காகும். நான் நினைக்கின்றேன் இது சிறந்ததல்ல.

கேள்வி: மாகாண சபைகள் முறை இல்லாமல் ஆக்கப்படுமா?

பதில்: மாகாண சபைகள் முறை இல்லாமல் ஆக்கப்படமாட்டாது. அது தான் அரசியல் உண்மை. உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சி புரிதல் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் நியாயம் தான் ஈடுசெய்தலாகும். அதன் மூலம் நடைபெறுவது என்னவென்றால் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரம் கீழ்மட்டத்தில் செயல்படுவதாகும். இந்த மாகாண சபை முறையிலும் இது தான் நடைபெறுகின்றது.

மாகாண சபை முறை எமது நாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டதற்கு இனப்பிரச்சினையே காரணமாகும். இம்முறைமூலம் கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம் ஏனைய மாகாணங்களுக்கும் பிரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகாரம் பரவலாக்கியதன் மூலம் நிர்வாகத்தின் பரிசுத்த தன்மை தெரியத் தொடங்கியது.

ஏனென்றால் அரசாட்சி மக்களை நெருங்கும்போது தான் அதன் பரிசுத்தன்மை தெரிய வருகின்றது.அதேபோல் முன்னேற்றமடையாத மாகாணங்களை அபிவிருத்தி அடையச் செய்யவும் மாகாண சபைகளை உபயோகிக்கலாம்.

மொனறாகலை பிரதேசத்தைப் பார்க்கும்போது சில அபிவிருத்தி சுட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தைவிட கீழ் மட்டத்திலேயே உள்ளன. ஏனென்றால் மொனறாகல பற்றி முடிவுகளை எடுப்பது கொழும்பிலிருந்து தான். அம்முடிவுகள் மொனறாகலை அபிவிருத்திக்கு காரணமாக அமையாது. எல்லாம் கொழும்பில் நடைபெறுவதன் தவறுதான் அது.

கேள்வி: அதாவது மாகாண சபைகள் இருந்தும் இன்னும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இந்த தவறை எவ்வாறு திருத்தம் செய்வது?

பதில்: புதிய அரசியலமைப்பில் ஆட்சி அதிகாரத்தை பிரதேச சபை நிறுவனங்களுக்கும் வழங்குவதே நோக்கமாகும். அதாவது சட்டமியற்றும் அதிகாரம் அல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை இந்நிறுவனத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது முன்னேற்றமடையாத பிரதேசங்களை விரைவாக முன்னேற்ற அப்பிரதேச மக்களால் இயலுமாக இருக்கும்.

கேள்வி: இன்னும் இம்முறையின் கீழ் எதிர்பார்த்த அபிவிருத்தியை அடைய முடியாதுள்ளது. இதனை யதார்த்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் மாகாண சபைகளின் அதிகாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களா?

பதில்: அதனை இதற்கு மேல் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு பிரச்சினையாக இருப்பது அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் சில தடைகள் காணப்படுவதாகும்.மாகாண சபை உறுப்பினர்களின் குற்றச்சாட்டானது 13வது அரசியலமைப்புத் திட்டத்தில் அதிகாரத்தை வலது கையால் கொடுத்து இடது கையால் பெறுகின்றார்கள் என்பதாகும்.

அதனால் வஞ்சகம் செய்யாமல் 13 வது அரசியல் திருத்தத்தின் மூலம் வழங்கிய அதிகாரத்தை மாகாண அபிவிருத்தியைத் துரிதப்படுத்த வழங்குமாறே அவர்கள் கேட்கின்றார்கள்.தற்போதுள்ள அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையிலுள்ள சட்ட சிக்கல்களை விடுவித்துத் தருமாறு அவர்கள் கேட்கின்றார்கள்.

 இங்கு புதிய அரசியலமைப்புக்கு சிறந்த யோசனையை வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை விட தெற்கிலுள்ள ஏழு மாகாண சபைகளின் உறுப்பினரகளே அளித்துள்ளார்கள். ஆகவே சட்ட திட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே இங்கு மிக முக்கியமாகும்.

கேள்வி: காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக சமூகத்திலுள்ள சந்தேகங்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: தற்போதும் அந்த அதிகாரம் உண்டு. நடைமுறைப்படுத்த வேண்டியதுதான் அவசியமாகவுள்ளது. 13வது அரசியலமைப்பில் உள்ள தேசிய காணி ஆணைக்குழுவை செயல்படுத்தினால் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் தேவையா? Reviewed by Author on March 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.