அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது! கடுமையாக சாடுகிறார் சுரேஷ்....


ஒட்டுமொத்த தமிழ் மக்களும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசுக்கு ஐ.நா கால நீடிப்பு வழங்க கூடாது என்று இருக்கும் போது சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்தானது மிகமிக முட்டாள்தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடியுள்ளார்.

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை   மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை   நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசுக்கு நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற சம்பந்தனின் கருத்து மிகமிக முட்டாள்தனமான கருத்து. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள்.

ஏற்கெனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் நல்லாட்சி எனக்கூறுபவர்கள் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள். அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க  மறுத்தவர்கள். ஐ.நாவில் ஒப்புக்கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத் தாதவர்கள். இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்யப்போகின்றார்கள்.

இராணுவத்தை விசாரிக்கமுடியாது, சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது, விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பிற்பாடு கால அவகாசம் எதற்கு?.இது சம்பந்தனுக்கு விளங்கவேண்டும்.

ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.
பல மாகாண  உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள்.

எனவே சம்பந்தன் இதனை விளங்கி கொண்டு உடனே  கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஐ.நாவுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது எனது கட்சி சார்ந்தும் தமிழ் மக்கள் சார்ந்தும்  நான் முன் வைக்கும் கோரிக்கையாகும் எனத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்,

இலங்கை அரசாங்கம் தமது உறவுகளை தேடித்தராது, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருகிறது என்பதனை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்  எனவே தான்  ஒரு சர்வதேச விசாரணைக்கு ஊடாக மாத்திரம்தான் காணாமல்போன உறவுகளை கண்டுபிடிக்க முடியும். அது மாத்திரம்  மன்றி உண்மைகள் வெளிக்கொண்டுவரப் படவேண்டும் என உணர்ந்துள்ளார்கள்.

அதாவது  காணாமல் போனவர்கள் எங்கிருகின்றார்கள்? அல்லது இருகின்றார்களா? இல்லையா? அல்லது இல்லையென்றால்  அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா? அவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தால் யாரால் கொலை செய்யப்பட்டார்கள்? என்ற உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண் டும்.

எனவேதான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணை என்பது  மிகமிக  அவசியம் என்பது உணரப் பட்டுள்ளது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனதுரையில் தெரிவித்துள்ளார். 

சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது! கடுமையாக சாடுகிறார் சுரேஷ்.... Reviewed by Author on March 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.