அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.வருகிறார் ரஜனிகாந் வவுனியாவில் வீடுகளையும் கையளிக்கிறார்....


தென்னிந்திய திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக வருகை தரவுள்ளார். ரஜனிகாந்தின் எந்திரன் 2 திரைப்பட படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று முடிவடையும் நிலையில், குறித்த திரைப் படத்தின first look ஐ இலங்கையில் வெளியிடுவதற்காகவும் வீடு கையளிப்பு நிகழ்வு ஒன்றிலும் பங்கேற்கவும் அவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

இந்த first look வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில்  வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள  வீடுகளை வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்த காணிகளற்ற 150 தமிழ் குடும்பங்களுக்கு கையளிக்கும்  நிகழ்வில் தென் இந்திய நடிகர்  சுப்பர் ஸ்ரார்  ரஜினிகாந்த்  கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம்  கையளிக்கவுள்ளதாக லைக்கா நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் உள்ள சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளி யங்குளம் ஆகிய இரண்டு  இடங்களிலும் மொத்தம்  150 புதிய வீடுகளை  பூந்தோட்டம் நலன்புரி நிலையம்  உட்பட வவுனியா மாவட்டத்தில் இருந்த நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த காணிகளற்ற இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களுக்கு ஞானம் அறக் கட்டளையின்  லைக்கா நிறுவனத்  தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகையின் ஞாபகார்த்தமாக  அமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்படவுள்ளது.
இந்த வீடுகளை மக்களுக்கு கையளிக்கும்  நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி   நடை பெறவுள்ளது.

இந்த வீடுகளை கையளிக்கும்  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என சுப்பர் ஸ்ரார்  ரஜினிகாந்திடம் கேட்ட போது ஈழத் தமிழ் மக்களுக்கான நிகழ்ச்சி என்றவுடன்  உடனே மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருவதற்கு   சம்மதித்துள்ளதாகவும்  அவர் இது போன்ற ஒரு  நிகழ்ச்சியில் கலந்து  கொள்வதற்காக இலங்கைக்கு முதல் முதலாக  வருகை தரவுள்ளதாக லைக்கா நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது  வடக்கு மாகாண  முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மலேசிய சென்ட் தலைவர் எஸ். விக்னேஸ்வரன், பிரிட்டனின் அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி உறுப்பினர் கீத்வாஸ் ஆகியோரும்  கலந்து  சிறப்பிக்கவுள்ளதாக  லைக்கா நிறுவனத்தின் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்.வருகிறார் ரஜனிகாந் வவுனியாவில் வீடுகளையும் கையளிக்கிறார்.... Reviewed by Author on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.