அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுக்கரை கிராமத்தில் யுவதி தூக்கிட்டு தற்கொலை-இன்று 18 ஆவது பிறந்த நாள்.(படம்)

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த அ.மேரி செறின் (வயது-17) என்ற யுவதி கடந்த 19 ஆம் திகதி புதன் கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளமை நானாட்டான் பிரதேசத்தையே சோகமயமாக்கியுள்ளது.

குறித்த யுவதி ஏன்,எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது இது வரை தெரியவில்லை.

குறித்த யுவதியின் பிரிவால் பெற்றோர்,சகோதரர்கள்,உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

உயிரிழந்த அ.மேரி செறின் இன்று 22 ஆம் திகதி தனது 18 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார்.

இன்றைய தினம் அமரர் மேரி செறின் அவர்களின் 18 ஆவது பிறந்த தினம்.

மரணத்தை தழுவிக்கொள்ள பல வழிகள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரு வழி இல்லாமல் போய் விட்டதா,,,, பலரது கேள்வி.




மன்னார் மடுக்கரை கிராமத்தில் யுவதி தூக்கிட்டு தற்கொலை-இன்று 18 ஆவது பிறந்த நாள்.(படம்) Reviewed by NEWMANNAR on April 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.