அண்மைய செய்திகள்

recent
-

77 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற வணக்கத்துக்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை-(படம்)

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தினமான இன்றைய தினம்(16-04-2017) தனது 77 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறுகின்றார்.

மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தவர்.
நாட்டில் இடம் பெற்ற போர் காரணமாக பாதீக்கப்பட்ட மக்களுக்காக கலத்தில் நின்று மக்களை காத்தவர்.

சர்வதேசத்தினை திசை திருப்பச் செய்து இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலையினை பறை சாற்றியவர்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த போதும்,வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்,முஸ்ஸீம் மக்களின் ஒற்றுமைகாகவும், யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்திற்காகவும் தன்னை அர்ப்பணம் செய்தவர்.

-கடந்த 2015 ஆம் ஆண்டு திடீர் சுகயீனம் காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த ஆயர் அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை அவர்களுக்கு பதிலாக மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவம்பிள்ளை ஆண்டகை நியமிக்கப்பட்டார்.

எனினும் அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு ஆன்மீகத்தலைவராக மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதிவணக்கத்திற்குறிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை இடம் பிடித்துள்ளார்.அவருக்கு மறைமாவட்ட மக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நியூ மன்னார் 
77 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற வணக்கத்துக்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை-(படம்) Reviewed by NEWMANNAR on April 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.