அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் 45ஆவது நாளாக தொடரும் போராட்டம்...


கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 45ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இரவு பகலாக தொடர்கிறது, இது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

“எங்களை அனைவரும் கைவிட்டுள்ளனர். 45ஆவது நாளாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகளுக்காக, அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற போதும் இந்த போராட்டத்தை எவரும் கண்டுகொள்ளவில்லை” என தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்து வரும் நாட்களில் நாங்கள் எங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி முன்னெடுக்கவுள்ளோம்.

அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாக கட்டமைப்பை முடக்கி போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 45ஆவது நாளாக தொடரும் போராட்டம்... Reviewed by Author on April 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.