அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் கறுப்பு ஆடையுடன் தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்....


கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 54ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

சித்திரைப் புதுவருடமான இன்றும் தொடரும் போராட்டத்தில் கறுப்பு ஆடை அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை போராட்டகாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,

சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும். அடுத்த வருடத்திலாவது எங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும்.


இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும்.


அத்துடன் எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும், இன்று சித்திரைபுதுவருட பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு வருடப் பிறப்பு நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருக்க நாங்கள் எங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக் கொண்டிருகின்றோம்.

கிளிநொச்சியில் கறுப்பு ஆடையுடன் தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்.... Reviewed by Author on April 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.