அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொதுவைத்தியசாலையில் கிளினிக்செல்லுபவர்களுக்கு நற்செய்தி....

மன்னார் பொதுவைத்தியசாலையில் பல்வேறு நோய்களுக்காக கிளினிக் செல்லும் நோயளர்களுக்கான நற்செய்தியான விடையம் என்ன வென்றால் நீண்ட காலமாக மன்னார் பொதுவைத்திய சாலையில் கிளினிக்கிற்காக செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளானார்கள் அவர்களுக்கெல்லாம் விடிவு காலம் தான் இது என்று சொல்லலாம்.

  • அதிகாலையில் போகத்தேவையில்லை....
  • வரிசையில் நிற்கத்தேவையில்லை.....
  • விரும்பிய நேரத்துக்கு சென்று மருந்து எடுக்கலாம்....

இதுவரை கிளினிக் செல்வோரின் நிலை இப்படித்தான் இருந்தது…

ஒரு மாதத்தில் ஒரு முறைதான் கிளினிக் என்றாலும் அந்த ஒரு முறை கிளினிக் என்றாலும் அதற்கான ஏற்பாடுகள் ஏராளம் செய்ய வேண்டும். அதற்கு தேவையானவை முதியவர்கள் தங்களுக்காக கிளினிக்கொப்பியை வைத்து இலக்கம் எடுப்பதற்காக பேரனையோ…. பேத்தியையோ… மகனையோ…மகளையோ… பக்கத்து வீட்டுக்காரனையோ…எதிர்பார்த்து தயார்படுத்தல் வேண்டும். அதுமட்டுமல்ல இவ்வாறான வசதி இல்லாதவர்கள் தாங்களாகவே அதிகாலையிலே வைத்தியசாலைக்கு சென்று வரிசையில் இருக்கவேண்டும் அல்லது நிற்கவேண்டும்.

மன்னார் பொதுவைத்தியசாலையின் அருகில் உள்ளவர்கள் நேரத்தோடு வந்துகொள்வார்கள் தூரப்பிரதேசங்களில் உள்ளவர்கள் பேசாலை தலைமன்னார் எருக்கலம்பிட்டி முருங்கன் இன்னும் பல்வேறு இடங்களில் உள்ளவர்கள் நிலை…  சிலர் சொந்த வாகனத்தில் வருவார்கள் பலர் தமது உறவுகளின் வீடுகளில் தங்கி இருந்தும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அதிகாலை 4-30 மணி முதல் 5-30 மணிக்குள் வந்து வரிசையில் நின்றால் தான் குறைந்தது 1-20 இற்குள் இலக்கத்தினை எடுத்தால் தான் கிளினிக்கில் நேரத்தோடு மருந்தினைப்பெற்றுக்கொள்ளலாம்…

பலரின் முதுமையும் சிலரின் இயலாமையும் தள்ளாடும் வயசில் ஓய்வெடுக்கும் நேரத்திலும் இப்படியான முறையில் அதிகாலையிலே வந்து வரிசையில் குந்தி இருந்து படும்வேதனை துன்பங்கள் சொல்லி முடியாது சிலர் மயங்கியும் விழுவதுண்டு….இன்னும் பல….

இப்படியான தொல்லைகள் துன்பங்கள் சிரமங்கள் இனிஇல்லை அதற்கு விடிவு காலம் தான் தற்போது பிறந்துள்ளது மன்னார் பொதுவைத்தியசாலை நிர்வாகம்  நல்ல தீர்வினை கொண்டுள்ளது.

 அதாவது அதிகாலையில்  வந்து வரிசையில் நின்று இலக்கம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை... காத்திருக்க வேண்டியதுமில்லை.... கிளினிக் வருவோர் தங்கள் கொப்பியில் தங்களுக்கு ஏற்ற இலகுவான நேரத்தினை சொல்லி பதிந்து கொண்டால் போதும் உடனே வந்து இலக்கத்தினைப்பெற்று பரிதோதனை செய்து மருந்து எடுக்கலாம் அவரவருக்கு ஏற்றது போல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • செவ்வாய்-மு-ப-08-00-மு-ப-09-00---மு.ப-10-00- மு.ப.-11-00
  • வெள்ளி-மு-ப-08-00-மு-ப-09-00---மு.ப-10-00- மு.ப.-11-00
  • வியாழன் பி.ப- 02-00-03-00 பி.ப-03-00- 03.45
மன்னார் பொதுவைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறு செயற்படுவது கிளினிக்செல்வோருக்கு மகிழ்ச்சியான விடையமே நிலையான முறையில் இவ்வாறான சிறப்பான விடையங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்….
-வை.கஜேந்திரன்-
 







மன்னார் பொதுவைத்தியசாலையில் கிளினிக்செல்லுபவர்களுக்கு நற்செய்தி.... Reviewed by Author on April 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.