அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்; தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா? தமிழ் மக்கள் அடுத்து என்ன? கருத்தாய்வு நிலை.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா? தமிழ் மக்கள் அடுத்து என்ன?எனும் மகுடத்திலான கருத்தாய்வு  நிலை கருத்து
பகிர்வுறவாடல் நிகழ்வு நாளை (22)  சனிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா நகர விருந்தினர் விடுதி (வாடிவீடு) மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

இவ் உயர் நிலைக் கருத்தாடலில் பிரதானமாக ஐந்து தலைப்புக்களில் துறைசார்ந்த நிபுணத்துவ கருத்தியலர்ளர்களால் ஆய்வியல் நோக்கில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

புதிய அரசியல் அமைப்பு, மனித உரிமைகள் ஆணையகத்தின்; இரண்டு ஆண்டு காலக்கெடு, நிலவிடுவிப்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், இவை தொடர்பில் அடுத்து என்ன? எனும் நோக்கில் ஆராயப்படவுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் விவகாரம் என்பதால்
தமிழ்த்தலைமைகள் வடகிழக்கு கருத்தியலாளர்கள் என பல நிலை செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எனவே தார்மீக அடிப்படையில் சம்மத்தப்பட்ட அனைவரும்
கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

-மன்னார் நிருபர்-
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்; தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா? தமிழ் மக்கள் அடுத்து என்ன? கருத்தாய்வு நிலை. Reviewed by Author on April 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.