அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள்

வவுனியாவில் 58வது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று  21.04.2017  khiy வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக காரியாலயத்திற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை கையளித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை என்னிடம் ஒப்படைக்குமாறும் அவற்றை தனக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கிணங்க இன்று என்னிடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் 115 நபர்களின் விபரங்களை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை விரைவில் சுகாதார அமைச்சருக்கு வழங்கவுள்ளேன் என தெரிவித்தார்.
 





வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் Reviewed by Author on April 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.