வித்தியா படுகொலை வழக்கு 10 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 10 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் எம்.எம் றியால் குறித்த உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.
இதன்படி குறித்த 10 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வழக்கின் 6ஆவது சந்தேகநபர் நீதவானிடம் வேண்டுகோளை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எனது தாயார் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என குறித்த சந்தேகநபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை கருத்திலெடுத்த நீதவான் இது தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேரில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் விசாரணைகளை ஆரம்பிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதன்படி குறித்த 10 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வழக்கின் 6ஆவது சந்தேகநபர் நீதவானிடம் வேண்டுகோளை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எனது தாயார் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என குறித்த சந்தேகநபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை கருத்திலெடுத்த நீதவான் இது தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேரில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் விசாரணைகளை ஆரம்பிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
வித்தியா படுகொலை வழக்கு 10 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Author
on
May 04, 2017
Rating:
No comments:
Post a Comment