அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதி மக்கள் தொடர் பாதிப்பு-படம்


மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுப்பொருட்கள் இன்று(25) வியாழக்கிழமை காலை எறியூட்டப்பட்டமையினால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டதோடு,அப்பகுதியில் உள்ள சுமார் 40 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு அசெகரியங்களுக்கும் முகம் கொடுத்தனர்.

-இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஒன்று திறண்ட அப்பகுதி மக்கள் குப்பை எறியூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபை அதிகாரிகள் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

-பின்னார் பௌஸர் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு தீ அனைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

-எனினும் தொடர்ச்சியாக பல வருடங்கள் குறித்த பகுதியில் குப்பை எறியூட்டப்படுவதாகவும்,இவ்விடை யம் தொடர்பில் மன்னார் நகர சபை உற்பட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித மாற்று வடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.

-தொடர்ச்சியாக கழிவுப்பொருட்கள் எறியூட்டப்படுகின்றமையினால் இப்பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள்,வயோதிபர்கள்,கர்ப்பி னித்தாய்மார்கள் என அனைவரும் பாதீக்கப்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள மக்கள் சுவாச நோய் மற்றும் தோல் நோய்க்கும் உள்ளாகுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள கழிவுகளைத்தவிர வைத்தியசாலையில் உள்ள கழிவுப்பொருட்களும் கொட்டப்பட்டு எறியூட்டப்படுவதாகவும்,இதனால் இப்பகுதி மக்கள் சுவாசிப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது காற்றுக்காலம் என்பதினால் உயிரிழத்த உயிரினங்கள் கொண்டு வந்து குப்பைகளுடன் போடுவதினால் பாரிய துர்நாற்றம் ஏற்படுவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-எனவே எதிர் வரும் காலங்களில் இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எறியூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த மன்னார் நகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-இச்சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,,,,

-மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களில் மன்னார் நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு என மன்னார் நகர சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பல வருடங்களாக கொட்டப்பட்டு எறியூட்டப்பட்டு வந்தது.

குப்பைகள் எரியூட்டுவதினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக ஏற்கனவே எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குப்பை கொட்டப்படுகின்றது.ஆனால் எரியூட்டப்படுவதில்லை.

எனினும் இன்றைய தினம் கெட்டப்பட்டிருந்த குப்பைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குப்பைக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாற்று இடம் வழங்கப்படும் வரை மன்னாரில் சேகரிக்கப்படுகின்ற கழிவு பொருட்கள் குறித்த இடத்திலேயே கொட்டப்படும்.ஆனால் எரியூட்டப்படாது   என அவர் மேலும் தெரிவித்தார்.













மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதி மக்கள் தொடர் பாதிப்பு-படம் Reviewed by NEWMANNAR on May 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.