அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை யாருடைய தேசம்! ”இலங்கையில் சிங்களவர்“ நூல் கூறும் செய்தி என்ன?


இலங்கை யாருடைய தேசம்? சிங்களவருடையதா? தமிழருடையதா? இந்தக் கேள்விகள்தான் அரை நூற்றாண்டு காலத் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணம்.

சிங்களவருடையது தான்’ என்றோ, ‘தமிழருடையது தான்’ என்றோ இறுதியாகவும் உறுதியாகவும் சொல்லிவிட முடியாது என்பதையே இவர் திரட்டியிருக்கும் பல்வேறு ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்பது பலரும் அறிந்ததே.

ஆனால், ‘மரபணு ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம்’ என்றும், ‘அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள்’ என்றும் பக்தவத்சல பாரதி சொல்கிறார்.

தமிழகம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மானுடவியல் துறையில் இருக்கிறார்.

தமிழர் மானுடவியல், திராவிட மானுடவியல், தமிழகத்தில் நாடோடிகள் எனப் பல செறிவான ஆய்வுகளைச் செய்து புத்தகங்களாக ஆக்கியவர்.

இதன் மூலமாகத் தென்னிந்தியப் பண்பாட்டை மீட்டெடுக்கும் செயலை விரிவாகச் செய்து வருபவர் பக்தவத்சல பாரதி.

அவரது அடுத்த படைப்புதான், ‘இலங்கையில் சிங்களவர்’. ‘இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும்’ என்ற துணைத் தலைப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

நம்முடைய கண்ணகி, சிங்களவர்களுக்குப் பத்தினி தெய்யோ.

நம்முடைய முருகன், சிங்களவர்களுக்கு கதரகமத் தெய்யோ.


இதைச் சொல்லும் இவர், திராவிட உறவு முறைகள், தென்னிந்திய மரபுகள், இந்தியச் சாதி முறைகள், ஆரிய மண முறைகள், தமிழ்ப் பெளத்தம், சிங்களப் பெளத்தம், தமிழ் மரபு, சிங்கள இனம்... ஆகியவற்றின் வழியாக தன்னுடைய ஆய்வை மேற்கொள்கிறார்.

சிங்களவருக்கும் தமிழருக்கும் நடந்த பண்பாட்டு உரையாடலை விளக்குகிறார்.

உண்மையில் சிங்களவர்கள் தென்னாசியச் சூழலில் மிகவும் வித்தியாசமானவர்கள். இவர்கள் இனத்துவத்தால் சிங்களவர்கள். மொழியால் இந்தோ ஆரிய மொழி பேசுபவர்கள்.

மதத்தால் பெளத்தர்கள். பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று சொல்கிறார் பக்தவத்சல பாரதி.

இறுதியாகக் கூறப்பட்ட கருத்து பலருக்குப் புதிராக இருக்கக் கூடும் என்பதும் அவரது எதிர்பார்ப்பு.

சிங்களவர்கள் தென்னிந்தியா வழியாகக் கடந்து இலங்கையில் குடியேறியது ஒருநாளில் நடந்தது அல்ல, அது ஒரு நீண்ட கால கட்டம்’ என்றும் சொல்கிறார்.

இன்றைய சிங்கள இன வாதமும் மானுடவியல் கோட் பாடுகளும் வேறுவேறாக இருக்கின்றன. இது சிங்களவர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் அதிர்ச்சியுடன் நோக்கும் புத்தகமாக இருக்கிறது.

இலங்கை யாருடைய தேசம்! ”இலங்கையில் சிங்களவர்“ நூல் கூறும் செய்தி என்ன? Reviewed by Author on May 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.