அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் நினைவு முற்றம் திறந்து வைப்பு...


வவுனியா, புதுக்குளம் பகுதியில் நினைவு முற்றம் எனும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டதுடன், முதியோர் இல்லமொன்றிட்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்படப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகள் நேற்று நடைபெற்றதுடன், இதில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்ததுடன், அடிக்கலையும் நாட்டி வைத்தார்.

பேராசிரியர் முருகர் குணசிங்கத்தினால் நிருவப்பட்டுள்ள இந்த நினைவு முற்றம் மண்டபமானது புதுக்குளம் கிராமத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் முகமாக அவர்களது படங்கள் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தனராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டதுடன், கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் நினைவு முற்றம் திறந்து வைப்பு... Reviewed by Author on May 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.