அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் கையளிப்பு.....

மன்னார் மாவட்டத்தில் இருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் கையளிப்பு
மன்னார் மாவட்டதில் உள்ள
  1. மன்னார்
  2. மாந்தை
  3. மடு
  4. முசலி
  5. நானாட்டான் 
ஜந்து பிரதேச செயலகமும் இணைந்து பொதுஅமைப்புக்கள் மக்களும் தங்களால் முடிந்தளவு  தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் மண்சரிவு போன்ற  பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கா சுமார் (1000000) பத்து இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான சேகரிக்கப்பட்ட  உலர் உணர்வுப்பொருட்கள் குடிநீர்ப்போத்தல்கள் ஏனைய பொருட்கள் எல்லாவற்றிணையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் M.Y.S.தேசப்பிரிய அவர்களிடம் 05 பிரதேச செயலாளர்களும் இணைந்து 01-06-2017 இன்று மாலை 3-30 மணியளவில் கையளித்தனர்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.A.ஸ்ரான்லி டிமெல்
உதவி  பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு திரு.பபாகரன் இவர்களுடன் ஏனைய அதிகாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர்.இங்கு பெற்றுக்கொண்ட பொருட்கள் அனைத்தும் பொதியிடப்பட்டு நாளை மதியம்  இரண்டு மணியளவில் அனர்த்தமுகாமைத்துவ அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.

உதவும் எண்ணத்திற்கும் நல்ல செயலை செய்துள்ள எமது மக்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.
துன்பம் என்று வரும் போது 
துயர் நீக்க......................................
துணையிருப்போம் ஒற்றுமையாய்.
-VMK-











மன்னாரில் இருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொருட்கள் கையளிப்பு..... Reviewed by Author on June 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.