மன்னாரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு…சிறப்பாக நடைபெற்றது.----படங்கள் இணைப்பு
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாhழ்வுதய பணியகத்தின் “உதவிக்கரம்”
(Centre For Disabled) பிரிவினால் “உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட வருடாந்த இரத்ததான முகாம் 22.06.2017 வியாழன் அன்று மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் நானாட்டான் பங்குத்தந்தை அருட்பணி அருள்ராஜ் அடிகளார் உட்பட மன்னார் மாவட்டம் மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு அரச திணைக்களங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதிசார் நிறுவனங்களிலிருந்தும் 75 இற்கும் அதிகமான குருதி நன்கொடையாளர்கள் இதில் பங்கெடுத்திருந்தனர்.
வருடந்தோறும் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந் நிகழ்விற்கு இம்முறை மெசியா
TVS, சிவா கோட்டல் உரிமையாளர்கள் தமது ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வு செவ்வனே நடந்தேறுவதற்கு உன்னிப்பாக ஈடுபட்ட மன்னார் வைத்தியசாலை இரத்த வங்கி குழுவினருக்கும் பிறர் உயிரில் கரிசனை கொண்டு இன்னுயிர் காக்க முன்வந்த குருதி நன்கொடையாளர்கள் அனைவருக்கும் கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் நிர்வாக அலுவலர் திட்ட முகாமையாளர்பணியாளர்கள் அனைவரும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மன்னாரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு…சிறப்பாக நடைபெற்றது.----படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 23, 2017
Rating:
No comments:
Post a Comment