மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் விபத்து-மாணவன் படுகாயம்.Photos
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று(21) புதன் கிழமை இரவு 7.15 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் படு காயமடைந்துள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-மன்னார் தரவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருச் செல்வம் தீபன் (வயது-19) என்ற மாணவனே விபத்திற்குள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-மன்னார் பஸார் பகுதியூடாக குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் தனியார் பேரூந்து தரிப்பிட பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது துவிச்சக்கர வண்டிக்கு பின் கொழும்பில் இருந்து பயணிகளுடன் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தை நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து குறித்த மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த மாணவன் தூக்கி வீசப்பட்டதோடு மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டி குறித்த தனியார் பேரூந்தினுள் சிக்கிக்கொண்டது.
உடனயடியாக அப்குதிக்கு வந்த மக்கள் குறித்த மாணவனை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் குறித்த பேரூந்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு குறித்த பேரூந்தை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
-தற்போது குறித்த மாணவன் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
-மன்னார் தரவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருச் செல்வம் தீபன் (வயது-19) என்ற மாணவனே விபத்திற்குள்ளான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-மன்னார் பஸார் பகுதியூடாக குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் தனியார் பேரூந்து தரிப்பிட பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது துவிச்சக்கர வண்டிக்கு பின் கொழும்பில் இருந்து பயணிகளுடன் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தை நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து குறித்த மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த மாணவன் தூக்கி வீசப்பட்டதோடு மாணவன் பயணித்த துவிச்சக்கர வண்டி குறித்த தனியார் பேரூந்தினுள் சிக்கிக்கொண்டது.
உடனயடியாக அப்குதிக்கு வந்த மக்கள் குறித்த மாணவனை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் குறித்த பேரூந்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு குறித்த பேரூந்தை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
-தற்போது குறித்த மாணவன் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் விபத்து-மாணவன் படுகாயம்.Photos
Reviewed by NEWMANNAR
on
June 21, 2017
Rating:
No comments:
Post a Comment