அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாபுலவில் பதற்றம்!! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றுள்ளனர்.

இதனால் பிரதான வீதியை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.

குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் மத்தியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது அந்த இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பிரதேசசெயலர் சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்பாபுலவில் பதற்றம்!! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் Reviewed by Author on June 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.