அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கருசல் பிரச்சனை -கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

மன்னார் கருசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை மாலை ஆஜர் செய்யப்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கடக்pழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை(6) காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

-எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு,அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (7) மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திறண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு,அப்பகுதி மக்களை அச்சுரூத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கருசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

-எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

-மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் விட்டின் பின் புரம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.

-இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளதுஇதனால் கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும்,பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸீம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

-நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



எனினும் திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.இதனால் திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் கோப நிலை ஏற்பட்டது.

-இதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்தரையாடியதோடு மக்களை அமைதி காக்குமாறு வேண்டு கோள் விடுத்தனர்.

-இந்த நிலையில் வன்முறையை தூண்டி விட்டவர்களை முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கருசல் மற்றும் பெரிய கருசல் கிராமங்களில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் மூன்று பேர் இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிமுதல் என்றும் இல்லாத அளவு மன்னார் நீதிமன்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு ; வீதித்தடைகள் போடப்பட்டது.

நீதிமன்றத்தினுள் செல்லுபவர்கள் பொலிஸாரினால் கடும் உடற் பரிசோதனைக்கு உற்படத்தப்பட்டனர்.

-மேலும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

-இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மன்னார் பொலிஸாரினால் அஜர் படுத்தினர்.

-இவர்கள் மீது மூன்று பிரிவுகளில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

-மேலும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து மன்றில் ஆஜர் படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது



மன்னார் கருசல் பிரச்சனை -கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு Reviewed by NEWMANNAR on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.