அண்மைய செய்திகள்

recent
-

கற்கிடந்த குளம் றோ.க.த.கபாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு


வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியில் கலந்து கொண்டு சாதணை படைத்த மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்-கற்கிடந்த குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(20) மாலை பாடசாலையின் அதிபர் எஸ்.பிரான்சிஸ் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்ரியன், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், நானாட்டான் கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.ஜெகநாதன்,மன்னார் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.ஞானராஜ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக சமூக சேவையாளர் ப.பாஸ்கரநாதன் மற்றும் குலோபல் லைப் அமைப்பின் பிரதி நிதி எஸ்.ஜங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியில் மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்-கற்கிடந்த குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவ மாணவிகள் 27 பேர் கலந்து கொண்ட நிலையில் 12 இடங்களை பெற்றுக்கொண்டதோடு,பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதணை படைத்த அந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது வருகை தந்த அதிதிகளினால் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு,குறித்த மாணவர்களின் வெற்றிக்கு பாடுபட்ட குறித்த பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் ஏ.அருள்குமார் கௌரவிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எல பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















கற்கிடந்த குளம் றோ.க.த.கபாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு Reviewed by NEWMANNAR on July 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.