அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு நடவடிக்கை ஏமாற்று வித்தை: சாந்தி எம்.பி....


கேப்பாப்புலவு காணி விடுவிப்பு நடவடிக்கை மக்களை ஏமாற்றும் வித்தை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட கேப்பாபிலவு காணியில் 180 ஏக்கர் மக்களுக்கு கையளிக்கப்படும் என விளம்பரப்படுத்தி கௌரவ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் வருகை தந்தார்.

அவர்களால் விடுவிக்கப்பட என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் 141 நாட்களாக போராடி வரும் மக்களுக்கு சொந்தமான எந்தக் காணியும் இல்லை.

மத்தியதர வர்க்கத்தினர் ஆறு பேருக்கு வழங்கப்பட்ட காணியையும் அரசுக்கு சொந்தமான காணியையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இக்காணி தற்போது வன இலாகாவிற்கு சொந்தமானது என எல்லையிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய தர வர்க்கத்தில் உள்ள காணி உரிமையாளர்கள் ஆறு பேரும் இந்தநாட்டில் இல்லை. ஆகவே இந்த காணியை கௌரவ அமைச்சர் யாருக்கு விடுவிக்கின்றார் அரசுக்கா ?

141 நாட்களாக போராடி வரும் மக்களின் ஒரு துண்டு காணியைக்கூட விடுவிக்க முடியாத அமைச்சர் மக்களின் எதிர்ப்பலைகளை தாக்கு பிடிக்க முடியாது ஆடம்பர நிகழ்வாக செய்ய நினைத்த நிகழ்வு கைவிடப்பட்டு திரும்பியுள்ளார்.

மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து காணியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு நடவடிக்கை ஏமாற்று வித்தை: சாந்தி எம்.பி.... Reviewed by Author on July 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.