அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வலையக்கல்விப்பணிமனை அருகில் தீ..... கட்டுப்பாட்டுக்குள்.....



மன்னார் இன்று 21-07- 2017 வலையக்கல்விப்பணிமனை அருகில் உள்ள RDA தங்கும் விடுதிக்கு அருகில்  நின்று கொண்டிருந்த பட்டுப்போன ஆலமரத்தில் ஏற்பட்ட தீயானது பெரும் சுவாலையுடன் எரிந்துள்ளது.

உடனடியாக செயல் பட்ட மன்னார் நகர சபை நீர்த்தாங்கியும் மன்னார் தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையினது நீர்த்தாங்கியும்  அத்துடன் றபிக்பொலிசார் பொதுமக்கள்  என அனைவரும் ஒன்றினைந்து 20நிமிடம் போராடி இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 இத்தீவிபத்து தொடர்பாக தெரிய வருவது குறித்த RDA தங்கும் விடுதிக்கருகில்  இருந்த பட்டுப்போன ஆலமரத்துடன்  பனைமரமும் சேர்ந்தே இருந்துள்ளது மாலையில் கூட்டிய குப்பைக்கு வைத்த தீயானது வீசுகின்ற காற்றின் சுழற்சியால் பட்டுப்போன ஆலமரத்தின் பத்தி அதனுடன் நின்ற பனைமரத்தின் ஓலையிலும் தீபரவி எரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் நடைபெறும் போது மன்னார் வலையக்கல்விப்பணிமனையில்  பரீட்சை தொடர்பான மீட்டல்  செயற்பாடு கடமையில் அதிகாரிகள் இடுபட்டுள்ளனர் இவ்தீவிபத்து காரணமாக யாருக்கும் எந்தவித ஆபத்தும் நேரிடவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதே.....













மன்னார் வலையக்கல்விப்பணிமனை அருகில் தீ..... கட்டுப்பாட்டுக்குள்..... Reviewed by Author on July 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.