அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ்,சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.

மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒன்பது தினங்கள் மாலையில் திருச்செபமாலையுடன் நவ நாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்படவுள்ளது.

மடு திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து,குடி நீர் ,சுகாதாரம்,மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை Reviewed by NEWMANNAR on July 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.