அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா....


முகநூல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் முகநூல் பயனாளர்கள் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 241 மில்லியன் பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்கா எனவும் அமெரிக்கர்கள் பெயரில் 240 மில்லியன் முகநூல் கணக்குகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவை முந்தியுள்ளது. இவ்விரு நாடுகளில் மட்டுமே முகநூலில் சுமார் கால் பங்கு பயனாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும், இரு நாடுகளிலும் தலா 11 சதவீதம் முகநூல் கணக்குகள் உள்ளன. பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

இதேவேளை. கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் புதிய முகநூல் கணக்குகள் தொடங்குவது 27 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா.... Reviewed by Author on July 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.