யாழில் தொடரும் தேடுதல் வேட்டை! இதுவரை 100 பேர் கைது....
யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினால் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடாநாட்டின் ஐந்து பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 100 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து நேற்று வரையான காலப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு தொடர்புடைய சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அடையாளம் உறுதி செய்யப்படாத 31 மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொரிகள் என்பன பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மானிப்பாய் உட்பட 5 பொலிஸ் பிரிவில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிலைமையை கருத்திற் கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் தொடரும் தேடுதல் வேட்டை! இதுவரை 100 பேர் கைது....
Reviewed by Author
on
August 08, 2017
Rating:
No comments:
Post a Comment