அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி! தந்தையும் மகனும் மரணம்

கேகாலை - பிடகல்தெனிய, குருகொடை ஓயாவில் பாய்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த தாய், மகள் மற்றும் மருமகள் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகண்ணாவை பிரதேசத்தினை சேர்ந்த குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், 57 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் இதில் பலியாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி! தந்தையும் மகனும் மரணம் Reviewed by NEWMANNAR on August 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.