அண்மைய செய்திகள்

recent
-

டெலோவின் உயர் மட்டம் இன்று கூடுகின்றது- டெனிஸ்வரனின் அமைச்சினை யாருக்கு வழங்குவது என்று இறுதி முடிவு.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உயர் மட்டம் இன்று சனிக்கிழமை 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் கூட இருக்கின்றது.

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வகையில் குறித்த உயர் மட்டக்கூட்டம் இடம் பெறவுள்ளது.

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி கோரிய போது தான் பதவி விலக மாட்டேன் என்றும் பதவி விலக்க முயற்சித்தால் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சி தனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியியுள்ளதோடு இன்று இடம் பெறவுள்ள உயர் மட்ட குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம் பெறும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் உயர் மட்டக் குழு கூட்டத்தில் டெனிஸவரனின் அமைச்சினை யாருக்கு வழங்குவது என்று இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
டெலோவின் உயர் மட்டம் இன்று கூடுகின்றது- டெனிஸ்வரனின் அமைச்சினை யாருக்கு வழங்குவது என்று இறுதி முடிவு. Reviewed by NEWMANNAR on August 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.