அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வாய்க்கால் மேம்படுத்தும் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வாய்க்கால் மேம்படுத்தும் திட்டத்தை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இன்று (24) வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வத்தார்.

மல்வத்து ஓயாவில் இருந்து யோதவௌ வரை செல்லும் நீர் வழங்கும் பிரதான கால்வாய் மார்க்கத்தின் அபிவிருத்தி பணிகளையே அமைச்சர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


-சுமார் 22 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வாய்க்கால் அபிவிருத்தி பணிக்காக முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட நூறு மில்லியன் ரூபாய் திநி ஒதுக்கீட்டில் சுமார் 20 மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்கள் இவ்வாறு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்கு நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் என்.துரைசிங்கம்,மேலதிக பணிப்பாளர்கள்,மன்னார் மாவட்ட பணிப்பாளர் எஸ்.குமார தேவ, மற்றும் மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்கள்,கமநல சேவை உத்தியோகஸ்தர்கள்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.





மன்னார் கட்டுக்கரை குளத்தின் வாய்க்கால் மேம்படுத்தும் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு. Reviewed by NEWMANNAR on August 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.