அண்மைய செய்திகள்

recent
-

வாழைச்சேனை முறாவோடை காணியின் பிரச்சினை இன்று முடித்துவைக்கப்பட்டது -Photos


வாழைச்சேனை முறாவோடை சக்திவித்தியாலயத்துக்குச் சொந்தமான காணி சம்மந்தமாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று
16-08-2017 மு.ப 12 மணிக்கு இடம்பெற்ற விசேட கூட்டத்தில் அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், மட்டக்களப்பு பொலிஸ்மா அதிபர், வாழைச்சேனை பிரதேசசெயலாளர் , கற்குடா வலய கல்விப்பணிப்பாளர், அப்பாடசாலை அதிபர், சுமண தேரர்  மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சிலர் கலந்துகொண்டனர். 

இக்காணி பாடசாலைக்குச் சொந்தமான காணி உடனடியாக நாளைவழக்கு  தொடரவும் என அக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் திட்டவட்டமாக கூறினார். அத்தோடு அப்பகுதி தமிழ் மக்களின் காணியில் அத்துமீறி குடியேறும் நபர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என பொலிஸ்மாதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று பொலிஸ்மாதிபர் வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கட்டளையிட்டார்.

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எப்படி வெற்றியளிக்கப்பட்டது என்றும் எப்போதும் ஒன்று பட்டால்வென்று காட்டலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம் என மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.


வாழைச்சேனை முறாவோடை காணியின் பிரச்சினை இன்று முடித்துவைக்கப்பட்டது -Photos Reviewed by NEWMANNAR on August 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.