அண்மைய செய்திகள்

recent
-

மடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம்.

மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலையப்பகுதியில் இன்று புதன் (9) கிழமை மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்னது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலையின் தகவல் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்   சிலாபம்  பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 'திலினி மதுசன்'   (வயது-25) என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்டம் மடுத்திருத்தளத்தின் ஆவனி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடுத்திருத்தளத்திற்கு  வருகை தந்துள்ளனர்.

-இந்த நிலையிலே மடு திருத்தள பகுதியில் இன்று புதன் கிழமை மாலை ஏற்பட்ட திடீர் இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாயாரான   'திலினி மதுசன்'   (வயது-25) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

மேலதிக விசாரனைகனை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம். Reviewed by NEWMANNAR on August 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.