அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை (செப்.19- 1957)



அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை (செப்.19- 1957)
அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியி்ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்


* 1870 - பிரான்சுக்கும் புருசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28-ல் புருசியாவிடம் வீழ்ந்தது.
* 1881 - ஜூலை 2-ல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட் இறந்தார்.
* 1893 - சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
* 1893 - நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு என்று பெயர் பெற்றது.
* 1942 - மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாசி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
 * 1944 - பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
 * 1952 - ஐக்கிய அமெரிக்கா சார்லி சாப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.
* 1976 - தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
* 1983 - சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.
* 1985 - மெக்சிகோவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் கொல்லப்பட்டனர்.
* 1989 - நைஜர் நாட்டில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்தது. இதில் 171 பேர் பலியானார்கள்.
 * 1997 - அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
* 2006 - தாய்லாந்தில் ராணுவப் புரட்சியில் ராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை (செப்.19- 1957) Reviewed by Author on September 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.