பெண்களை சங்கிலியால் இழுத்து டெல்லியில் விவசாயிகள் நூதனபோராட்டம்
தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 72-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி போராட்டக் குழுவில் உள்ள 2 பெண்களின் கைகளில் சங்கிலியை கட்டி, அதை பிரதமர் மோடி வேடம் அணிந்த ஒருவர் இழுத்துச்செல்வது போன்று நூதனபோராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘விவசாயிகளே தற்கொலை செய்து விட்டார்கள். அவர்களின் மனைவிகளாகிய நீங்கள் ஏன் இங்கு வந்து போராடுகிறீர்கள்? பேசாமல் ஊருக்கு செல்லுங்கள் என்று பிரதமர் சொல்வதாக சித்தரித்து இந்த போராட்டத்தை நடத்தினோம்’ என்றனர்.
பெண்களை சங்கிலியால் இழுத்து டெல்லியில் விவசாயிகள் நூதனபோராட்டம்
Reviewed by Author
on
September 26, 2017
Rating:
No comments:
Post a Comment