டெல்லியில் 73-வது நாளாக போராட்டம்: ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேற தமிழக விவசாயிகளுக்கு நோட்டீஸ்
டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் 73-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஜந்தர்மந்தரில் இருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் 73-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஜந்தர்மந்தரில் இருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டம் நேற்று 73-வது நாளாக நீடித்தது. நேற்றைய போராட்டத்தையும் வழக்கம்போல நூதன முறையில் நடத்தினர். அதாவது, பிரதமர் மோடி வேடம் அணிந்த ஒருவர், விவசாயிகளை அடித்து உதைத்து விரட்டுவது போல நடித்து காண்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் அப்பகுதியினரை வெகுவாக கவர்ந்தது.
போராட்டத்தின்போது சிறு சலசலப்பும் ஏற்பட்டது. விவசாயி ஒருவரை டெல்லி போலீசார் தாக்கியதாக கூறி மற்ற விவசாயிகள் கண்டனம் தெரிவித்து கூச்சலிட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே, தமிழக விவசாயிகள் ஜந்தர்மந்தரில் இருந்து வெளியேறுமாறு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக எழுத்துபூர்வமாகவும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘எங்களது போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், எனவே, உடனடியாக ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேறுமாறும் போலீஸ் துணை கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுவரை 3 நோட்டீஸ்கள் எங்களுக்கு வந்துள்ளன. எங்களை கட்டாயமாக வெளியேற்றும் விதத்தில் தண்ணீர் சப்ளையையும் நிறுத்தி விட்டனர்.
இதை கண்டித்து நாங்கள் மறியலில் ஈடுபட முயன்றோம். அதன்பிறகே தண்ணீர் வந்தது. எங்களது போராட்டத்தை ஒடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் இதற்கு ஒரு தீர்வு காணாமல் நாங்கள் செல்ல மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் 73-வது நாளாக போராட்டம்: ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேற தமிழக விவசாயிகளுக்கு நோட்டீஸ்
Reviewed by Author
on
September 27, 2017
Rating:
No comments:
Post a Comment