அண்மைய செய்திகள்

recent
-

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும்..... முத­ல­மைச்­சா் க.வி.விக்­னேஸ்­வ­ரன்


நாங்­கள் தமிழ் பேசும் மக்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம். நாங்­கள் அதே உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் எம்­மைச் சுற்­றி­யுள்ள எம் மக்­க­ளுக்கு வழங்­கு­கின்­றோமா என்று எண்­ணிப் பார்க்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சா் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தாா்.
மாகாண மட்ட வணிக கண்­காட்­சி­யும், தொழில் சந்­தை­யும் கிளி­நொச்­சி­யில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது

“சம­த­ளத்­தில் ஒன்­றாக” எனும் தொனிப்­பொ­ரு­ளில் கண்­காட்சி நடத்­தப்­ப­டு­கின்­றது. சம­நி­லை­யில் அனை­வ­ரும் என்­பதே அதன் பொருள். மாற்­றுத் திற­னா­ளி­களை சம­நி­லைக்­குக் கொண்­டு­வர வேண்­டும் என்­பதே இந்­தச் செயற்றிட்­டத்­தின் குறிக்­கோள்.அவர்­களை வாழ்­வா­தார உத­வி­கள் மூல­மாக தொழில் முனை­வோ­ராக அல்­லது வர்த்­த­கர்­க­ளாக மாற்­றம் பெறச் செய்­வ­தன் மூலம் அவர்­க­ளை­யும் ஏனைய மக்­க­ளுக்குச் சமனான ஒரு சம­நிலை அந்­தஸ்த்­தைப் பெறக்­கூ­டி­ய­வர்­க­ளாக உரு­மாற்­றம் பெறச் செய்­ய­லாம் என்­பதே இந்­தச் செயல்­திட்­டத்­தின் உத்­தே­சம். கடந்த கால போரின் கார­ண­மாக நாம் பல இழப்­புக்­கள், கசப்பு உணர்­வு­க­ளுக்கு ஆளா­னோம். மாற்­றுத் திற­னா­ளி­க­ளாக வலிந்து உரு­வாக்­கப்­பட்ட எமது இளை­ஞர் யுவ­தி­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் எத்­த­னையோ சோகச் சுமை­களை மன­தில் ஏந்­தி­ய­வாறு எம்­மி­டையே வாழ்­கின்­ற­னர்.அவர்­க­ளின் சோகச் சுமை பற்றி எம்­மில் பலர் சிந்­திப்­ப­தில்லை. அவர்­களை நாம் அர­வ­ணைத்து அன்பு பாராட்டி எம்­மு­டன் அழைத்­துச் செல்ல நாம் முன்­வர வேண்­டும்.

மாற்­றுத் திற­னா­ளி­கள் தாம் பெற்ற பயிற்­சி­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளின் தொழிற்­தி­றன் உற்­பத்­தி­களை இன்­றைய இந்த கண்­காட்சி நிகழ்­வு­க­ளில் காட்­சிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்­கள்.
இதன் மூலம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வர்த்­த­கத்­துக்­கான உற்­பத்­திப் பொருள்­களை அவற்­றின் தரங்­களை மக்­கள் அறிந்து கொள்­வ­தற்­கும் அந்­தப் பொருள்­க­ளின் தேவை உட­ன­டி­யாக இல்­லாது விட்­டா­லும் பிறி­தொரு சந்­தர்ப்­பத்­தில் அந்­தத் தேவை­கள் உண­ரப்­ப­டும் போது இந்த உற்­பத்­தி­யா­ளர்­களை அணுகி அவர்­க­ளின் உற்­பத்­திப் பொருள்­களை கொள்­வ­னவு செய்து கொள்­வ­தற்­கும் இன்­றைய கண்­காட்சி வழி­வ­குக்­கும்.

இது போன்ற நல்ல கைங்­க­ரி­யங்­களை ஆற்­று­வ­தற்கு வலு­வுள்­ள­வர்­கள், சமூக அமைப்­புக்­கள், பண­மு­டை­ய­வர்­கள் முன்­வர வேண்­டும். அதன் மூலம் மாற்­றுத் திற­னா­ளி­களை பிரித்­துப் பார்க்­கின்ற ஒரு நிலை இல்­லா­மல் ஆக்­கப்­பட்டு அவர்­கள் அனை­வ­ரும் வல்­ல­வர்­க­ளாக மாற்­றப்­பட வேண்­டும்.
அந்த நல்ல நாளை விரை­வில் வரச் செய்­வ­தற்­காக அனை­வ­ரும் உங்­கள் உத­விக் கரங்­களை நீட்­டுங்­கள் என்­றார்.

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும்..... முத­ல­மைச்­சா் க.வி.விக்­னேஸ்­வ­ரன் Reviewed by Author on September 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.