திறந்த நிலையில் கிடக்கும் வாய்க்கால்கள் விழுந்தெழும்பும் மக்களும் கால்நடைகளும்.......
நடைபெற்றுக்கொண்டும் இருக்கின்றது. நல்லவிடையம் தான் அத்தோடு பெரியளவில் வாய்க்கால்கள் கட்டப்பட்டும் கட்டிக்கொண்டும் இருக்கின்றார்கள் இதுவும் நல்ல விடையம் தான் ஏனெனில் நீண்டகாலத்திற்கு பிறகு இப்பணிகள் நடைபெறுகின்றது. சிறியதும் உடைந்தும் கிடந்த வாய்க்கால்களும் வாய்க்கால் இல்லாமல் இருந்த இடங்களும் வாய்க்கால் வந்துள்ளது மகிழ்ச்சிதான் ...
இருந்தாலும் அந்த மகிழ்ச்சி நிலைப்பது குறைவாக உள்ளது.
காரணம் என்னவெனில் அபிவிருத்திப்பணிகள் முடிந்த வாய்க்கால் மேற்பகுதிகள் மூடாமலும் மூடிய மேற்பகுதிகளில் பெரிய இடைவெளிகள் இருப்பதாலும் அதே நேரம் பிரதான வீதிகளின் அருகில் வாய்க்கால் மேற்பகுதிகள் கனரக வாகனங்களின் போக்குவரத்துப்பாவனையால் உடைந்தும் உள்ளது...
இதனால் ஏற்படும் விபரீதங்கள் பாருங்கள்
- பாதசாரிகளின் பாவனைக்கு கடிணம்
- பலர் பலமுறை இந்த வாய்க்காலினுள் விழுந்துள்ளார்கள் காயங்களும் முறிவும் ஏற்பட்டுள்ளது.
- அதுபோல விலங்குகள் (கழுதை.நாய்.மாடுகள் இன்னும்) இந்தவாய்க்காலில் விழுந்து பெரும் பாதிப்புக்குள்ளாவதுடன் சில கழுதைகள் இறந்தும் உள்ளது.
- பலர் இந்த திறந்து கிடக்கும் வாய்க்காலில் குப்பைகளை கொட்டி நிறைப்பதோடு கூட்டி கொழுத்தியும் விடுகின்றார்கள் கொழுத்தியும் விடுகின்றார்கள் இதனால்வாய்க்கால் வெடிப்புக்குள்ளாகின்றது அதன் பாவனைத்தன்மை குறையும்.
- வீதிகளின் இருமருங்கிலும் கிடக்கின்ற கழிவு மண்கள் கல்லுகள் வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தையும் அகற்ருங்கள்.
- மழைகாலம் நெருங்குவதால் வெள்ளம் ஓடாது நீர்தேங்கி தொற்று நோய்கள் ஏற்படும் அல்லவா.
- சுத்தம் சுகாதாரம் பாதிக்கப்படும்.
- மின்சாரம் தடைப்படும் போதும் புதிதாய் வருவோரும் இப்படி திறந்து கிடக்கும் வாய்க்கால்களில் விழுந்து விபத்துக்கள் ஏற்படும்.
- இன்னும் இதர பிரச்சினைகள் நடைபெறும் இவ்வாறான அனைத்துப்பிரச்சினைகள் நடைபெறமல் இருக்க வேண்டுமானால் இலகுவாக செய்யவேண்டிய விடையமே வாய்க்காலினை மூடி பாதுகாப்பாக அமைத்தல் மட்டுமே.....
உங்கள் அபிவிருத்திப்பணிகளில் குறை காண்பதோ...... பிழை சொல்வதோ.........நோக்கம் அல்ல........
தரமான அபிவிருத்திக்கும் அரோக்கியமான மக்களின் பாவனைக்கும் ஏற்றால் போல் நடைபெறும் அபிவிருத்தியே முழுமையான சிறந்த அபிவிருத்தியாகும்
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்கள் தகுந்த முறையில் தரமான சேவையை வழங்க வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பயை முன்வைக்கின்றோம்-மன்னார்விழி-
திறந்த நிலையில் கிடக்கும் வாய்க்கால்கள் விழுந்தெழும்பும் மக்களும் கால்நடைகளும்.......
Reviewed by Author
on
September 03, 2017
Rating:
No comments:
Post a Comment