அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையம் திறந்து வைப்பு-(படம்)


மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையம் இன்று சனிக்கிழமை(16) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தினை  கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயற்படுத்துகைக்கு அமைவாகவும்,ஐரோப்பிய ஒன்றியத்தின்  நிதி உதவியுடன், உலக உணவு விவசாய ஸ்தாபனத்தினால் நிர்மானிக்கப்பட்ட குறித்த கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையம் இன்று சனிக்கிழமை(16) பைவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித,உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்ட பணிப்பாளர் எஸ்.சுதர்மன் ஆகியோர் கலந்து  கொண்டார்.

இதன் போது மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காப்புறுதி செய்திருந்த மீனவர் ஒருவர் கடலில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கு காப்புறுதி பணம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையம் திறந்து வைப்பு-(படம்) Reviewed by Author on September 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.